உலக நாடுகளின் தலையீடின்றிய பேச்சுவார்த்தை காலத்தை கடத்தும் செயல்: சாள்ஸ் நிர்மலநாதன்

Sri Lankan political crisis
By Ashik Dec 25, 2022 12:23 PM GMT
Report

இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற ஏதாவது ஒரு நாட்டின் மத்தியஸ்தம் இல்லாமல் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த பலனும் இல்லை, அது வெறுமனே காலத்தை கடத்தும் செயற்பாடு என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டுள்ளார். 

மன்னாரில் வைத்து இன்று (25.12.2022) ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 

உலக நாடுகளின் தலையீடின்றிய பேச்சுவார்த்தை காலத்தை கடத்தும் செயல்: சாள்ஸ் நிர்மலநாதன் | Srilanka Crisis Political Situation Rajapaksa

சர்வதேச அழுத்தங்கள்

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தற்போது நாட்டினுடைய ஜனாதிபதி தமிழ் மக்களுக்கான உரிய தீர்வை நோக்கிய அறிவிப்பு அல்லது முன்மொழிவை பற்றி பல இடங்களில் கூறி வருகின்றார், அவ்வாறு கூறுவதற்கு சர்வதேச நாடுகளுடைய அழுத்தங்கள் காரணமாக இருக்கலாம்.

ஏனென்றால் இன்று இலங்கையில் ஏற்பட்டு இருக்கின்ற பொருளாதார நெருக்கடியை சர்வதேச நாடுகளுடைய உதவி இல்லாமல் மீட்டெடுக்க முடியாது. ஆகவே சர்வதேச நாடுகளை திருப்திப்படுத்துவதற்கு நாட்டினுடைய ஜனாதிபதி இந்த முன் மொழிவை முன் வைக்கக்கூடும்.

உலக நாடுகளின் தலையீடின்றிய பேச்சுவார்த்தை காலத்தை கடத்தும் செயல்: சாள்ஸ் நிர்மலநாதன் | Srilanka Crisis Political Situation Rajapaksa

தமிழ் கட்சிகளின் இணக்கப்பாடு

என்னைப் பொருத்தவரையில் முதலில் தமிழ் கட்சிகள், வடக்கு கிழக்கில் இருக்கின்ற மத தலைவர்கள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்.

ஒவ்வொருவரும் வரைவு தொடர்பாகவும் தீர்வு திட்டம் தொடர்பாகவும் ஒவ்வொரு விதமாக கதைப்பது என்பது அவர்களது கட்சிகள் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என கதைக்கின்றார்களோ தெரியாது. என்னை பொருத்தவரையில் தமிழர்களுடைய தீர்வு என்பது ஒட்டுமொத்த கட்சிகளும் முதலில் ஒரு இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்.

இணக்கப்பாட்டுக்கு வந்ததன் பிற்பாடு அரசியல் யாப்பில் எப்படிப்பட்ட மாற்றங்கள் கொண்டு வந்தால் தமிழர்கள் இறைமையுடன் வாழ முடியும் என்ற ஒரு வரைபிற்கு வர வேண்டும்.

உலக நாடுகளின் தலையீடின்றிய பேச்சுவார்த்தை காலத்தை கடத்தும் செயல்: சாள்ஸ் நிர்மலநாதன் | Srilanka Crisis Political Situation Rajapaksa

ஒப்பந்தங்கள் நடைமுறை 

ஏனெனில் 1948 ஆம் ஆண்டிலிருந்து ஆட்சியாளர்களுடன் பேசிக் கொண்டிருக்கின்றோம். ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு கிழிக்கப்பட்டன. இந்திய இலங்கை ஒப்பந்தங்கள் கூட முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஆகவே வெறுமனே இலங்கை அரசாங்கத்துடன் பேசி தமிழ் மக்களுக்கு உரிய தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

உலக நாடுகளின் தலையீடின்றிய பேச்சுவார்த்தை காலத்தை கடத்தும் செயல்: சாள்ஸ் நிர்மலநாதன் | Srilanka Crisis Political Situation Rajapaksa

சர்வதேச நாடுகளின் தலையீடு

குறிப்பாக சர்வதேச நாடுகள் உடைய மத்தியஸ்தம் குறிப்பாக இந்தியா அமெரிக்கா அல்லது பிரித்தானியா இந்த மூன்று நாடுகளைச் சார்ந்த ஏதோ ஒரு நாடுகள்  இல்லாமல் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை செய்வது என்பது காலத்தை கடத்துகின்ற செயலாகத்தான் இருக்கும்.

அந்த பேச்சுவார்த்தை மூலம் தமிழ் மக்களுக்கு உரிய இறைமை உடன் வாழக் கூடிய தீர்வு வரும் என்பது எனக்கு நம்பிக்கை இல்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு 5

20 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
18ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, கட்டுவன், மீசாலை, Toronto, Canada

22 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், யாழ். அத்தியடி, உரும்பிராய், திருகோணமலை, Milton, Canada

21 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Kamp-Lintfort, Germany

16 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Neuilly-Plaisance, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை வடக்கு, கொடிகாமம்

21 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், கல்வியங்காடு, Cergy, France

19 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, வெள்ளவத்தை கொழும்பு

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, சூரிச், Switzerland

24 Sep, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கோண்டாவில்

22 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, Neuilly-sur-Marne, France

22 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
அகாலமரணம்

மண்கும்பான் மேற்கு, பிரான்ஸ், France

05 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US