வசந்த முதலிகேவுக்கு மீண்டும் விளக்கமறியல்(Video)
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேவின் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள வசந்த முதலிகே, நேற்றைய தினம் (12.12.2022) கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இன்றைய தினம் (13.12.2022) வரை விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டிருந்தார்.
நீதிமன்றத்தின் உத்தரவு
வசந்த முதலிகே இன்றைய தினம் (13.12.2022) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதும் அவர் மீதான சட்ட மா அதிபரின் குற்றப் பத்திரிகை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.
இதனையடுத்து எதிர்வரும் ஜனவரி மாதம் 17ம் திகதி வரை ஒரு அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
90 நாட்கள் தடுப்புக் காவல்
முன்னதாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த அவர் 90 நாட்கள் வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய நாடுகள் உட்பட... சில நாட்டவர்களின் விசா அனுமதியைக் கட்டுப்படுத்த பிரித்தானியா முடிவு News Lankasri
