கோவிட் உடலங்களை அடக்கம் செய்ய மற்றுமொரு இடத்திற்கு ஒப்புதல் கோரும் சமூகத் தலைவர்கள்
கோவிட் தொற்றினால் மரணமாவோரின் உடலங்களை அடக்கம் செய்ய மேலும் ஒரு அடையாளம் காணப்பட்ட ஒரு இடத்துக்காவது அரசாங்கத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று சமூகத் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
நேற்று காலை வரை மட்டக்களப்பு ஒட்டமாவடியில் உள்ள முஸ்லிம் மையவாடியில் கோவிட் தொற்றினால் மரணமானவர்களி;ன் 224 ஆக உடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன .
இதில் தகனத்தை விரும்பாத ஏனைய மதத்தினரின் உடலங்களும் உள்ளடங்கியுள்ளன. கோவிட் தொற்றினால் மரணமாவோருக்காக ஒதுக்கப்பட்ட பகுதி ஆரம்பத்தில் 10 ஏக்கர் என்று கூறப்பட்டது. எனினும் அது மூன்று ஏக்கர்களாகக் குறைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளதாக அனைத்திலங்கை ஜனாஸா சங்கத்தின் தலைவர் நியாஸ்டீன் சத்தார் தெரிவித்தார்.
கோவிட் தொற்றினால் மரணமாகும் ஒவ்வொரு உடல்களும்,மூன்று அடி இடைவெளியில் அடக்கம் செய்யப்படுகின்றன. இதன்படி மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் 250-270 உடலங்களை மட்டுமே அடக்கம் செய்ய முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .
கோவிட் தொற்றினால் மரணமாவோரை அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதித்த இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்னர் கோவிட் தொற்றினால் மரணமானோரின் சுமார் 335 உடலங்கள் தகனம் செய்யப்பட்டன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த நேரத்தில், உடனடி பிரச்சினை எதுவும் இல்லை, ஆனால் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்று முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சமூகத் தலைவருமான அலி ஷாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.
இறந்தவர்களை அடக்கம் செய்ய விரும்பும் கிறிஸ்தவர்கள், இந்துக்கள் மற்றும் பௌத்தர்களுக்கும் இந்த பகுதியில் இடமளிக்கப்பட்டுள்ளளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் தொற்றினால் மரணமாவோரின் உடலங்களை அடக்கம் செய்ய நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நானாயக்காரரின் வேண்டுகோளின் பேரில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை மற்றும் தேசிய புவியியல் பணியகம் ஆகியவற்றால் அடையாளம் காணப்பட்ட பிற இடங்களும் உள்ளன.
”
இவற்றில் ஒன்று அம்பாறை மாவட்டத்தில் இறக்காமத்திலும் மற்றொரு தளம்
மன்னாரிலும் உள்ளன.
இந்த நிலையில் அடக்கத்துக்காக ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களை வழங்கினால் அது,
சுகாதார அதிகாரிகள் உட்பட்டவர்களின் சுமையை எளிதாக்கும். மரணமாவோரின்
உடலங்களை அவரவர் சொந்தப் பிரதேசங்களில் அடக்கம் செய்கின்றபோது அந்தத்த
பிரதேசத்தில் பணிகளில் இருக்கும் சுகாதார அதிகாரிகள் கண்காணிப்பில்
ஈடுபட முடியும் என்றும் அலி ஷாகிர் மௌலானா தெரிவித்துள்ளார்.