இலங்கையில் மீண்டும் உச்சம் தொட்ட கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை
கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 44 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 44 பேரும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்,இதற்கமைய இன்று அடையாளம் காணப்பட்ட கோவிட்தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1895 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 119,424 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 810 பேர் இன்று (06) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய நாட்டில் இதுவரை கோவிட் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 100,885 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களில் 734 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.