உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் : சந்தேகநபர் பிணையில் செல்ல அனுமதி (Video)
உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பாக சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணி வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் பிணையில் செல்ல மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் இன்று உத்தரவிட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய மேலும், 29 பேரை தொடர்ந்தும் எதிர்வரும் 20 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர் தொடர்பான விசாரணை
கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்று, அம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் காத்தான்குடியை சேர்ந்தவர்கள், சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர் உட்பட 69 பேரை கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக காத்தான்குடி பொலிஸார் வழக்கு தாக்குல் மேற்கொண்டனர். இவர்கள் அனைவரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
இவற்றில் சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர் ஆகியோரது வழக்குகள் நீதவான் நீதிமன்றில் இருந்து மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதுடன் 11 பேர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதுடன், 25 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 30 பேர் தொடர்ந்து நாட்டிலுள்ள பொலன்னறுவை, அனுதாரபுரம், கேகாலை, பதுளை, மொனராகலை திருகோணமலை, போன்ற சிறைச்சாலைகளில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது ஒருவரை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், மேலும், 29 பேரை எதிர்வரும் 20 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான்
உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
