அநுரகுமார தொடர்பில் சிறீதரனின் முடிவு

Jaffna Anura Kumara Dissanayaka S Shritharan
By Mayuri Apr 07, 2024 11:08 AM GMT
Report

அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரையில் தமிழர்களுக்கான நம்பிக்கை ஒளிக்கீற்று எதுவும் தென்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் (Sivagnanam Shritharan) தெரிவித்துள்ளார்.

மாறாக ஏனைய சிங்களத் தலைவர்களை விடவும் தமிழர் நலன்கள் தொடர்பான மிகக் குறைந்தளவிலான கரிசனையுடனேயே அவர் பேசியிருக்கின்றார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அநுரகுமாரவின் கருத்து

இலங்கையில் ஏப்ரல் 15ஆம் திகதி பொது விடுமுறையா..! வெளியான அறிவிப்பு

இலங்கையில் ஏப்ரல் 15ஆம் திகதி பொது விடுமுறையா..! வெளியான அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் (Jaffna) கடந்த வியாழக்கிழமை (04.04.2024) நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் வட மாகாண மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க, “எமக்கு வாக்களியுங்கள் என்றோ, 13 பிளஸ் தருகின்றோம் அல்லது சமஷ்டியை தருகின்றோம் - எமக்கு வாக்களியுங்கள் என்றோ கூறுவதற்காக நான் இங்கு வரவில்லை. வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற பிரதேச பேதங்களும், இன, மதபேதங்களுமின்றி நாம் அனைவரும் கூட்டு முயற்சியுடன் ஒன்றிணைய வேண்டும். நாட்டை புதியதொரு பாதையில் கொண்டு செல்ல வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை முன்னிறுத்தி ஒன்றிணைந்து அரசாங்கத்தை அமைக்க முன்வருமாறு வடக்கின் அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்” என கூறியுள்ளார்.

அநுரகுமார தொடர்பில் சிறீதரனின் முடிவு | Sridharan S Decision Regarding Anura

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே சிறீதரன் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அநுரகுமார திசாநாயக்கவின் உரையில் தமிழர்களுக்கான நம்பிக்கை ஒளிக்கீற்று எதுவும் தென்படவில்லை. மாறாக ஏனைய சிங்களத் தலைவர்களை விடவும் தமிழர் நலன்கள் தொடர்பான மிகக் குறைந்தளவிலான கரிசனையுடனேயே அவர் பேசியிருக்கின்றார்.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இளம் விவசாயி செய்த சாதனை

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இளம் விவசாயி செய்த சாதனை

பிரச்சினைக்குரிய விடயங்கள்

அதேபோன்று யுத்தம் தீவிரமடைந்திருந்த காலகட்டத்தில் சுமார் 40,000 இராணுவ வீரர்களை இணைத்தமை, இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட வடக்கு, கிழக்கு இணைப்பை பிரிப்பதில் முன்னின்று செயற்பட்டமை, யுத்தத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோது அதுகுறித்து குறைந்தபட்சம் அனுதாபம் கூட வெளியிடாமை போன்ற பல்வேறு பிரச்சினைக்குரிய விடயங்கள் அநுரகுமார திசாநாயக்க தரப்பில் காணப்படுகிறது.

அண்மைய காலங்களில் வட, கிழக்கு மாகாணங்களில் பௌத்த பிக்குகளின் பங்கேற்புடன் இடம்பெற்றுவரும் அத்துமீறல்கள் தொடர்பில் அநுரகுமார திசாநாயக்க ஒருமுறைகூட கண்டனத்தை வெளிப்படுத்தவில்லை.

அநுரகுமார தொடர்பில் சிறீதரனின் முடிவு | Sridharan S Decision Regarding Anura

இன மதவாதமற்ற, அனைத்து மக்களுக்குமான சிறந்த தலைவர் என்ற ரீதியில் அநுரகுமார திசாநாயக்க முதலில் தன்னை முன்னிலைப்படுத்தவேண்டும். மேலும், 13ஆவது திருத்தம் அல்லது சமஷ்டி முறையிலான தீர்வு குறித்து எவ்வித உத்தரவாதத்தையும் வழங்குவதற்கு தான் வரவில்லை என்று கூறுபவருக்கு தமிழ் மக்கள் எந்த அடிப்படையில் வாக்களிப்பார்கள்.

அநுரகுமார திசாநாயக்க தமிழர்களிடத்தில் மாத்திரமன்றி, சிங்கள மக்கள் மத்தியிலேயே இன்னமும் தன்னை ஒரு சிறந்த தலைவனாக காண்பிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். 

கத்லீன் புயலால் சேவையிழந்த பிரித்தானிய விமானங்கள்

கத்லீன் புயலால் சேவையிழந்த பிரித்தானிய விமானங்கள்

சுமந்திரனின் கருத்து

இதேவேளை தானும், அநுரகுமார திசாநாயக்கவும் தனியாக ஒரு அறையில் சந்தித்து அண்மையில் பேசியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எம்மோடு சுதந்திரம் பெற்ற இந்தியாவில் அனைத்து இன மக்களும் இணைந்து வாழ்கின்றதாக அநுர இதன்போது சுட்டிக்காட்டினார்.

அநுரகுமார தொடர்பில் சிறீதரனின் முடிவு | Sridharan S Decision Regarding Anura

அதற்கு நான், இந்தியா அப்படியிருக்க இந்தியா மொழி பேசுகின்ற பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டது தான் காரணம். சமஷ்டி அடிப்படையில் பிரிக்கின்ற போது அடிப்படை அடையாளமாக கொள்ளப்பட்டது மொழி.

இது தான் இன்றைக்கும் இந்தியா ஒரு நாடாக இருப்பதற்கு காரணம் என நான் சுட்டிக்காட்டினேன். அதனால் தான் நாம் இங்கேயும் மொழி அடிப்படையில் ஒரு அதிகார பகிர்வை கோருகிறோம் என விளக்கி கோரினேன். எனினும் அதற்கான பதிலை அவர் கூறியிருக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.  

தலாய் லாமாவின் இலங்கை விஜயத்தை எதிர்க்கும் சீனா

தலாய் லாமாவின் இலங்கை விஜயத்தை எதிர்க்கும் சீனா

தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழரசுக் கட்சிக்கு இடையில் விசேட சந்திப்பொன்று கொழும்பில் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் இவ்வாறான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தமிழரசுக் கட்சி மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு இடையில் விரைவில் சந்திப்பு

தமிழரசுக் கட்சி மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு இடையில் விரைவில் சந்திப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, வடமராட்சி

17 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கொழும்பு, கோப்பாய் மத்தி

17 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்

வாதரவத்தை, வவுனியா, Paris, France

12 May, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, கோப்பாய், கொழும்பு

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Aalen, Germany, Schwäbisch Gmünd, Germany

15 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம்

17 May, 2018
மரண அறிவித்தல்

உடப்புசல்லாவ, சிட்னி, Australia

11 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
மரண அறிவித்தல்

சிறுக்கண்டல், பரிஸ், France

05 May, 2024
மரண அறிவித்தல்

யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Louvres, France

14 May, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

09 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

நிலாவெளி, திருகோணமலை

13 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, London, United Kingdom

28 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வியாபாரிமூலை, தெஹிவளை

16 May, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

09 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சூராவத்தை

15 May, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Paris, France

14 May, 2023
22ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பலெர்மோ, Italy

15 May, 2022
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, சென்னை, India

14 May, 2022
மரண அறிவித்தல்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US