கத்லீன் புயலால் சேவையிழந்த பிரித்தானிய விமானங்கள்
”கத்லீன்” எனப்படும் புயலுடன் கூடிய வெப்பமான காலநிலை காரணமாக பிரித்தானியாவின் (United Kingdom) விமான சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கைக்கு அமையவே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சுமார் 140 பிரித்தானிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காற்று
மேலும், சீரற்ற காலநிலையால் ஸ்கொட்லாந்தில் (Scotland) உள்ள தொடருந்து மற்றும் படகு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேநேரம், காற்றின் சீரற்ற நிலை காரணமாக இங்கிலாந்தின் (England) வடமேற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகள் மற்றும் வடக்கு அயர்லாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் (England) ஆகிய பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri