அநுரகுமார தொடர்பில் சிறீதரனின் முடிவு
அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரையில் தமிழர்களுக்கான நம்பிக்கை ஒளிக்கீற்று எதுவும் தென்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் (Sivagnanam Shritharan) தெரிவித்துள்ளார்.
மாறாக ஏனைய சிங்களத் தலைவர்களை விடவும் தமிழர் நலன்கள் தொடர்பான மிகக் குறைந்தளவிலான கரிசனையுடனேயே அவர் பேசியிருக்கின்றார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அநுரகுமாரவின் கருத்து
யாழ்ப்பாணத்தில் (Jaffna) கடந்த வியாழக்கிழமை (04.04.2024) நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் வட மாகாண மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க, “எமக்கு வாக்களியுங்கள் என்றோ, 13 பிளஸ் தருகின்றோம் அல்லது சமஷ்டியை தருகின்றோம் - எமக்கு வாக்களியுங்கள் என்றோ கூறுவதற்காக நான் இங்கு வரவில்லை. வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற பிரதேச பேதங்களும், இன, மதபேதங்களுமின்றி நாம் அனைவரும் கூட்டு முயற்சியுடன் ஒன்றிணைய வேண்டும். நாட்டை புதியதொரு பாதையில் கொண்டு செல்ல வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை முன்னிறுத்தி ஒன்றிணைந்து அரசாங்கத்தை அமைக்க முன்வருமாறு வடக்கின் அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்” என கூறியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே சிறீதரன் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அநுரகுமார திசாநாயக்கவின் உரையில் தமிழர்களுக்கான நம்பிக்கை ஒளிக்கீற்று எதுவும் தென்படவில்லை. மாறாக ஏனைய சிங்களத் தலைவர்களை விடவும் தமிழர் நலன்கள் தொடர்பான மிகக் குறைந்தளவிலான கரிசனையுடனேயே அவர் பேசியிருக்கின்றார்.
பிரச்சினைக்குரிய விடயங்கள்
அதேபோன்று யுத்தம் தீவிரமடைந்திருந்த காலகட்டத்தில் சுமார் 40,000 இராணுவ வீரர்களை இணைத்தமை, இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட வடக்கு, கிழக்கு இணைப்பை பிரிப்பதில் முன்னின்று செயற்பட்டமை, யுத்தத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோது அதுகுறித்து குறைந்தபட்சம் அனுதாபம் கூட வெளியிடாமை போன்ற பல்வேறு பிரச்சினைக்குரிய விடயங்கள் அநுரகுமார திசாநாயக்க தரப்பில் காணப்படுகிறது.
அண்மைய காலங்களில் வட, கிழக்கு மாகாணங்களில் பௌத்த பிக்குகளின் பங்கேற்புடன் இடம்பெற்றுவரும் அத்துமீறல்கள் தொடர்பில் அநுரகுமார திசாநாயக்க ஒருமுறைகூட கண்டனத்தை வெளிப்படுத்தவில்லை.
இன மதவாதமற்ற, அனைத்து மக்களுக்குமான சிறந்த தலைவர் என்ற ரீதியில் அநுரகுமார திசாநாயக்க முதலில் தன்னை முன்னிலைப்படுத்தவேண்டும். மேலும், 13ஆவது திருத்தம் அல்லது சமஷ்டி முறையிலான தீர்வு குறித்து எவ்வித உத்தரவாதத்தையும் வழங்குவதற்கு தான் வரவில்லை என்று கூறுபவருக்கு தமிழ் மக்கள் எந்த அடிப்படையில் வாக்களிப்பார்கள்.
அநுரகுமார திசாநாயக்க தமிழர்களிடத்தில் மாத்திரமன்றி, சிங்கள மக்கள் மத்தியிலேயே இன்னமும் தன்னை ஒரு சிறந்த தலைவனாக காண்பிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
சுமந்திரனின் கருத்து
இதேவேளை தானும், அநுரகுமார திசாநாயக்கவும் தனியாக ஒரு அறையில் சந்தித்து அண்மையில் பேசியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எம்மோடு சுதந்திரம் பெற்ற இந்தியாவில் அனைத்து இன மக்களும் இணைந்து வாழ்கின்றதாக அநுர இதன்போது சுட்டிக்காட்டினார்.
அதற்கு நான், இந்தியா அப்படியிருக்க இந்தியா மொழி பேசுகின்ற பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டது தான் காரணம். சமஷ்டி அடிப்படையில் பிரிக்கின்ற போது அடிப்படை அடையாளமாக கொள்ளப்பட்டது மொழி.
இது தான் இன்றைக்கும் இந்தியா ஒரு நாடாக இருப்பதற்கு காரணம் என நான் சுட்டிக்காட்டினேன். அதனால் தான் நாம் இங்கேயும் மொழி அடிப்படையில் ஒரு அதிகார பகிர்வை கோருகிறோம் என விளக்கி கோரினேன். எனினும் அதற்கான பதிலை அவர் கூறியிருக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழரசுக் கட்சிக்கு இடையில் விசேட சந்திப்பொன்று கொழும்பில் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் இவ்வாறான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri
