மாவீரர்களின் பெற்றோர்களைக் கௌரவிக்கும் நிகழ்வில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருடன் சிறீதரன் வாக்குவாதம் (Video)
மாவீரர்களின் பெற்றோர்களைக் கௌரவிக்கும் நிகழ்வில் பொலிஸ் புலனாய்வு பிரிவினருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருடன் வாக்குவாதம்
வன்னேரிக்குள வட்டாரத்தில் மாவீரர்களின் பெற்றோர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று (27.11.2022) காலை நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வைக் காணொளிப் பதிவாக்கிய சிறுவனின் கைத்தொலைபேசியைப் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் பறித்துள்ளார்.
இதைக் கண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்
சிறீதரன், பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன்
கைத்தொலைபேசியையும் குறித்த சிறுவனிடம் மீளப் பெற்றுக்கொடுத்தார்.