தனுஷ்க குணதிலக்கவின் செலவுகளை ஏற்க முன்வந்துள்ள அவுஸ்திரேலிய வாழ் இலங்கையர்கள்
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு ஒதுக்கப்பட்ட 150,000 அவுஸ்திரேலிய டொலர் பிணைத்தொகை அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கைப் பெண்ணொருவரால் வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், அந்தப் பெண்ணுக்கும் தனுஷ்க குணதிலக்கவுக்கும் இடையிலான தொடர்பு இதுவரையில் வெளியாகவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்கள் தனுஷ்க குணதிலக்கவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்.

செல்வந்தர் ஒருவரின் வீட்டில் அடைக்கலம்
தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை பெறும்போது அவுஸ்திரேலிய பொலிஸாருக்கு நிரந்தர முகவரியை வழங்க வேண்டியிருப்பதால், குணதிலக்கவுக்கு அந்த நாட்டில் உள்ள செல்வந்தர் ஒருவரின் வீட்டின் முகவரி வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர் அந்த வீட்டில் வசிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரின் வழக்கு முடியும் வரை அவரது செலவுகளை அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்கள் ஏற்க முன்வந்துள்ளனர்.
தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கு ஜனவரி 12ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படவுள்ளது.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri