தனுஷ்க குணதிலக்கவின் செலவுகளை ஏற்க முன்வந்துள்ள அவுஸ்திரேலிய வாழ் இலங்கையர்கள்
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு ஒதுக்கப்பட்ட 150,000 அவுஸ்திரேலிய டொலர் பிணைத்தொகை அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கைப் பெண்ணொருவரால் வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், அந்தப் பெண்ணுக்கும் தனுஷ்க குணதிலக்கவுக்கும் இடையிலான தொடர்பு இதுவரையில் வெளியாகவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்கள் தனுஷ்க குணதிலக்கவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்.

செல்வந்தர் ஒருவரின் வீட்டில் அடைக்கலம்
தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை பெறும்போது அவுஸ்திரேலிய பொலிஸாருக்கு நிரந்தர முகவரியை வழங்க வேண்டியிருப்பதால், குணதிலக்கவுக்கு அந்த நாட்டில் உள்ள செல்வந்தர் ஒருவரின் வீட்டின் முகவரி வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர் அந்த வீட்டில் வசிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரின் வழக்கு முடியும் வரை அவரது செலவுகளை அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்கள் ஏற்க முன்வந்துள்ளனர்.
தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கு ஜனவரி 12ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படவுள்ளது.
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam