கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூன்று வெளிநாட்டு பயணிகள் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூன்று வெளிநாட்டு பயணிகள் நேற்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
136,20,000 ரூபாய் மதிப்புள்ள 454 கையடக்க தொலைபேசிகள் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கையடக்க தொலைபேசி
சந்தேக நபர்கள் மலேசியாவின் கோலாலம்பூரில் வசிக்கும் 26, 49 மற்றும் 22 வயதுடைய மூன்று தொழிலதிபர்கள் என அவர்கள் கையடக்க தொலைபேசி கடைகளை நடத்துவதாகவும் தெரியவந்துள்ளது.

அவர்கள் கொண்டு வந்த 04 பொதிகளில் கையடக்க தொலைபேசிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 எண்ணெய் கப்பல்களை அதிரடியாக தாக்கி அழித்தது ஈரான்! கொழுந்துவிட்டு எரியும் காட்சிகள் - தீவிரமடையும் கள நிலவரம்..
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri