வாடகை விமானம் மூலம் வியட்நாமில் இருந்து அழைத்து வரப்பட்ட 152 இலங்கையர்கள்

Refugee Sri Lanka Refugees Sri Lanka Vietnam
By Jenitha Dec 28, 2022 07:04 AM GMT
Report

இலங்கையின் வெளிவிவகார அமைச்சும் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM) இணைந்து வியட்நாம் கடற்பகுதியில் மீட்கப்பட்ட 302 இலங்கை ஏதிலிகளில் 152 இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அதன்படி நேற்று (டிச.27) வியட்நாமின் ஹோசிமின் நகரில் இருந்து வாடகை விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

வீடுகளுக்கு அனுப்பப்படும் ஏதிலிகள்

அவர்களின் வாக்குமூலங்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) பதிவு செய்யப்பட உள்ளதாகவும், அவர்கள் அவர்களது வீடுகளுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வாடகை விமானம் மூலம் வியட்நாமில் இருந்து அழைத்து வரப்பட்ட 152 இலங்கையர்கள் | Sri Lankans Out Of Over 300 Rescued Off Vietnam

வெளிவிவகார அமைச்சு, இலங்கை கடற்படை மற்றும் பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் வியட்நாமில் உள்ள இலங்கை தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து, சிங்கப்பூரை தளமாகக் கொண்ட பிராந்திய கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையங்களுடன் (MRCC) புலம்பெயர்ந்தோருக்கான மீட்பு முயற்சிகளை ஒருங்கிணைத்துள்ளது.

ஒரு மாதத்திற்கும் மேலாக, இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு ஆனது வியட்நாம் அரசு மற்றும் வியட்நாமில் உள்ள இலங்கை தூதரகத்துடன் ஒருங்கிணைந்து உணவு, மருத்துவ உதவி, சுகாதார கருவிகள் மற்றும் அனைத்து புலம்பெயர்ந்தோருக்கு ஆலோசனை ஆதரவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை வழங்குவதை உறுதி செய்துள்ளதாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு

சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்தோரின் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்தல், சிறப்புப் பட்டய விமானம் மூலம் திருப்பி அனுப்புதல், அவர்களது வீடுகளுக்குச் செல்லும் போக்குவரத்து மற்றும் இலங்கையில் விரிவான மறு ஒருங்கிணைப்பு உதவிகள் 600,000 அமெரிக்க டொலர்களுக்கு மேல் என இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

முறையற்ற வழிகளில் எல்லைகளை கடக்க முயற்சிக்கும் இலங்கை புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்புதல் மற்றும் மீண்டும் ஒருங்கிணைக்கும் செயல்பாட்டில் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு வழங்கிய தாராள ஆதரவிற்கு வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழ் ஏதிலிகள் 303 பேருடன் கனடா நோக்கி பயணித்த மீன்பிடிப் படகு மூழ்கியதையடுத்து, அதில் பயணித்தவா்கள், சிங்கப்பூர் அதிகாரிகளால் மீட்கப்பட்டு கடந்த (08.11.2022) வியட்நாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இலங்கை ஏதிலி ஒருவர் உயிரிழப்பு

இவ்வாறு மீட்கப்பட்ட இலங்கை ஏதிலிகள் மூன்று குழுக்களாக பிரித்து, மூன்று முகாம்களில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏதிலிகள் தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு மீள திரும்ப போவதில்லை தொடர்ச்சியாக தெரிவித்து வந்தனர். 

அவர்களில் 152 இலங்கையர்கள் மட்டும் மீண்டும் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், இன்று நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 

வாடகை விமானம் மூலம் வியட்நாமில் இருந்து அழைத்து வரப்பட்ட 152 இலங்கையர்கள் | Sri Lankans Out Of Over 300 Rescued Off Vietnam

அத்துடன் மீட்கப்பட்ட இலங்கை ஏதிலிகளில் இரு ஏதிலிகள் தங்களை மீளவும் இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் என தெரிவித்து தங்களது உயிரை மாய்த்து கொள்ள முயற்சித்தனர்.

அவர்களில் யாழ்ப்பாணம் - சாவக்கச்சேரி பகுதியைச் சேர்ந்த 37 வயதான சுந்தரலிங்கம் கிரிதரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.   

4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
நன்றி நவிலல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US