ஜோர்தானில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் இயலுமை இலங்கைக்கு இல்லை

Sri Lanka Immigration Jordan
By Parthiban.A Jan 16, 2024 04:08 PM GMT
Parthiban.A

Parthiban.A

in சமூகம்
Report

ஜோர்தான் நாட்டில் தொழிற்சாலை ஒன்று மூடப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் அங்கு பணியாற்றிய நூற்றுக்கணக்கான இலங்கைப் பெண்கள் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர்.

அந்த நாட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் குறித்த பெண்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான ஏற்பாடுகளையோ அல்லது நாடு திரும்பவோ உதவும் இயலுமை இல்லாமையால் குறித்த பெண்கள் செய்வதறியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்திய மற்றும் பங்களாதேஷ் தொழிலாளர்களுடன் இணைந்து இந்த இலங்கைத் தொழிலாளர்கள் ஜோர்தானின் தொழிற்துறையிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

முச்சக்கரவண்டிகளுக்கு புதிய QR முறை அறிமுகம்

முச்சக்கரவண்டிகளுக்கு புதிய QR முறை அறிமுகம்

அவதிப்படும் தொழிலாளர்கள்

அதேவேளை இலங்கையர்களைத் தவிர ஏனைய நாட்டவர் தமது தூதரகங்கள் மூலம் தங்குமிட ஏற்பாடுகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.

’’அனைத்து தொழிலாளர்களும் அவதிப்படுகின்றனர், எனினும் தமது நாட்டைச் சேர்ந்த பணியாளர்களை மீட்டு அவர்களுக்கான ஏற்பாடுகளைச் செய்யும் இயலுமை ஜோர்தானிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு இல்லை என நாங்கள் நம்புகிறோம்” என ஜோர்தானின் முன்னணி மனித உரிமைகள் அமைப்பு ஒன்று கூறுகிறது.

ஜோர்தானில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் இயலுமை இலங்கைக்கு இல்லை | Sri Lankan Workers Trapped In Jordan

”ஜோர்தானில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்களிடமிருந்து எமக்கு முறைப்பாடுகள் வரவில்லை.” என தலைநகர் அமானிலுள்ள தம்கீன் எனும் அமைப்பின் சட்டத்தரணி ஒருவர் கூறுகிறார்.

அந்த அமைப்பு ஜோர்தானில் பணியாற்றும் தொழிலாளர்கள், புலம் பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகளின் உரிமைகள் மற்றும் தொழிற்சங்கங்களை ஆதரிக்கிறது.

அந்த தொழிற்சாலையின் உரிமையாளர் நாட்டைவிட்டு ஓடியதால் ஊழியர்கள் ஊதியம் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். இதே நெருக்கடியை இந்திய மற்றும் பங்களாதேஷ் ஊழியர்கள் எதிர்கொண்டாலும், அவர்கள் தமது பிரச்சினைகளை வெளிப்படுத்தும் நம்பிக்கையுடன் அந்த தன்னார்வ அமைப்பை தொடர்புகொள்ள தீர்மானித்தனர்.

ஜோர்தானின் ஷபாபி பகுதியில் செயற்பட்ட மூன்று ஆடைத் தொழிற்சாலைகளில் பணியற்றிய குறைந்தபட்சம் 350 இலங்கைத் தொழிலாளர்கள் அவை மூடப்பட்ட நிலையில் அங்கு சிக்கியுள்ளனர்.

அவர்கள் பணியாற்றிய அசீல் யுனிவர்செல் கார்மெண்ட்ஸ் நிறுவனம் நட்டமடைந்துள்ளது. மேலும் தம்து உரிமையாளர் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகவும் கூறுகிறது.

இதன் காரணமாக ஊதியம் கிடைக்காத தொழிலாளர்கள் நாடு திரும்ப முடியாமல் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். அங்கு வேலையிழந்த பெண்கள் விடுதிகள் மற்றும் அந்த நிறுவனத்தின் தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என கொழும்பு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், அங்கு சமூக ஊடகத் தகவல்களின் அடிப்படையில் அங்கு எவ்விதமான அடிப்படை வசதிகளும் இல்லை.

டெங்கு நோயினால் மற்றுமொரு பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு

டெங்கு நோயினால் மற்றுமொரு பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு

தூதரகம் என்ன செய்கிறது

இலங்கைக்கு எமது டொலர்கள் மாத்திரம்தான் வேண்டுமா? என இலங்கைத் தூதரகத்திற்கு வெளியே கூடிய பெண்களில் ஒருவர் ஆத்திரத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனக்கு போதுமான உணவில்லை, எனக்கு குடிநீர் இல்லை, கடந்த மாதம் நான் நோய்வாய்ப்பட்டேன். எனது வேதனைகளை எடுத்துக்கூற யார் இருக்கிறார்கள்?” என அவர் மேலும் கேள்வி எழுப்புகிறார்.

ஜோர்தானில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் இயலுமை இலங்கைக்கு இல்லை | Sri Lankan Workers Trapped In Jordan

அனைத்து வேலைகளும் செய்த பின்னர் எம்மை இங்கிருந்து வெளியேற்றினால், எங்களை யார் கவனித்துக்கொள்வார்கள்? இந்த நாட்டில் நாங்கள் நிராதரவாக விடப்பட்டுள்ளோம்.

இங்கிருக்கும் தூதரகம் என்ன செய்கிறது? தூதரகத்தில் இருப்பவர்கள் சும்மா வந்து சென்று போகிறார்கள். எவ்வித உதவியும் இல்லை. கண்ணீருடன் உருக்கமான ஒரு வேண்டுகோள் ஒன்றையும் அவர் விடுத்துள்ளார்.

நான்கு மாதங்களாக ஊதியம் நிலுவையில் உள்ளது, ஏழு மாதங்கள் சமூகப் பாதுகாப்பு கிடைக்கவில்லை. நாங்கள் எமது உரிமைகளை மட்டுமே கேட்கிறோம்.

எங்களைப் பெயரளவிற்கு மட்டுமே ‘வெளிநாடு வாழ் கதாநாயகர்கள்’ என்று கூறுகிறார்களா?

அந்த தொழிற்சாலை ஒரு மாதமாக மூடப்பட்டுள்ளது. அங்கு சிக்கியுள்ள பிரஜைகளை நாட்டிற்கு கொண்டுவரும் திட்டங்கள் எதையும் இலங்கை அரசு இறுதி செய்யவில்லை.

இலங்கையர்களைப் பொறுத்தவரை, அவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் போன்ற உள்ளூர் முகவர்களிடம் பதிவு செய்த பிறகே ஜோர்தான் சென்றனர்.

சர்வதேசத்தின் துணைகொண்டு தமிழ் மக்களை அழித்தவரே மகிந்த: ஜனா எம்.பி ஆதங்கம்

சர்வதேசத்தின் துணைகொண்டு தமிழ் மக்களை அழித்தவரே மகிந்த: ஜனா எம்.பி ஆதங்கம்

தொழிலாளர்களுக்கு இழப்பீடு

சில அங்கு சுற்றுலா விசாவில் சென்று பணியாற்றுகின்றனர். முதலாவது பிரிவினர் தொடர்பில் எம்மால் பொதுவான வழிமுறைகளின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.

ஆனால் இரண்டாவது பிரிவினரைப் பொறுத்தவரையில் விசேட தீர்மானம் ஒன்று எடுக்கப்பட வேண்டும் என கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சர் ஜெகத் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

ஜோர்தானில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் இயலுமை இலங்கைக்கு இல்லை | Sri Lankan Workers Trapped In Jordan

தாங்கள் ஏற்கனவே ஜோர்தானிய தொழிற்துறை அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

ஒரு தொழிற்சாலை மூடப்படும் போது, தொழிலாளர்களுக்கு இழப்பீடு அளிக்கப்பட வேண்டும். அங்கிருக்கும் உரிய அதிகாரி இது தொடர்பில் தொழிற்சாலையிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

எனவே, உரிய இழப்பீடுகள் வழங்கப்பட்ட பின்னர் உரிய வழிமுறைகளை கடைபிடித்து சில இலங்கையர்கள் நாடு திரும்பவுள்ளனர்.

ஆனால் அங்கு சிக்கியுள்ள 350 பணியாளர்களின் நிலைமை மேலும் மோசமடைவதற்கு முன்னதாக, இந்த உரிய வழிமுறைகளை வகுத்து, காத்திரமான நடவடிக்கை திட்டம் ஒன்றை எடுக்க அரசுக்கு எவ்வளவு காலமாகும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Parthiban.A அவரால் எழுதப்பட்டு, 16 January, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US