குறைந்த செலவில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக பாரிய மோசடி
வெளிநாடுகளுக்கு மலிவான விமான டிக்கெட்டுகளை வழங்குவதாகக் கூறி பல்வேறு நபர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய்களை மோசடி செய்த பெண் ஒருவரை கொழும்பு மோசடி புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது.
புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த 2 முறைப்பாடு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான டிக்கெட்டுகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்து முறைப்பாட்டாளர்களிடம் பணம் பெற்ற இந்தப் பெண், நீண்ட காலமாக அவர்களைத் தவிர்த்து வந்துள்ளதாக கொழும்பு மோசடி புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
பண மோசடி
சந்தேக நபரான பெண் தங்களிடம் இருந்து 6.5 மில்லியன் ரூபாய் மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள பெண்ணை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 12 மணி நேரம் முன்
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து தாரா சொன்ன விஷயம், அதிர்ச்சியில் நந்தினி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam