அகதிகள் என்ற போர்வையில் தமிழகத்தில் பதுங்கி இருக்க முயற்சித்த இலங்கையர் கைது

Tamil nadu Sri Lanka Sri Lanka Police Investigation
By Ashik Nov 11, 2023 06:45 PM GMT
Report

இலங்கையில் இருந்து படகு மூலம் இந்தியாவின் தனுஷ்கோடிக்கு தப்பிச்சென்ற சந்தேகநபர் ஒருவரை அப்பகுதி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அகதிகள் போர்வையில் தமிழகத்தில் பதுங்கி இருப்பதற்காக படகு மூலம் தனுஷ்கோடி சென்ற நிலையிலேயே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

தனுஷ்கோடி - அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் இன்று (11.11.2023) காலை அந்நிய நபர்கள் நடமாட்டம் மற்றும் கடத்தல் தடுப்பு தொடர்பாக ரோந்து பணியில் இராமேஸ்வரம் மரைன் பொலிஸார் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அப்போது தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில் மரைன் பொலிஸாரை கண்டதும் தப்பி ஓட முயன்ற இலங்கை நபர் ஒருவரை மடக்கிப் பிடித்து விசாரணை செய்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல் அளித்துள்ளார்.

யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய போதைவிருந்து: விளக்கமளித்துள்ள உணவக நிர்வாகம்

யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய போதைவிருந்து: விளக்கமளித்துள்ள உணவக நிர்வாகம்

சட்டவிரோதமாக ஊடுருவல்

இதனால் சந்தேகமடைந்த மரைன் பொலிஸார் மண்டபம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தபோது அவர் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் ஊர்காவல் துறையை சேர்ந்த ஜெயராசா என தெரியவந்ததுள்ளது.

இதையடுத்து அவரிடம் மத்திய மாநில உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் மரைன் பொலிஸார் ஜெயராசாவிடம் விசாரணை நடத்திய போது அவர் மீது இலங்கை சாவகச்சேரி மற்றும் ஊர்க்காவல் துறை காவல் நிலையங்களில் திருட்டு மற்றும் பல குற்ற பின்னணி வழக்குகள் காணப்படுவதாக கூறப்படுகிறது.

அகதிகள் என்ற போர்வையில் தமிழகத்தில் பதுங்கி இருக்க முயற்சித்த இலங்கையர் கைது | Sri Lankan Who Tried Hide In Tamil Nadu Arrested

இந்நிலையில் இவரை இலங்கை பொலிஸார் கைது செய்து சிறை தண்டனை பெற்று சிறையில் அடைத்து விடுவார்கள் என்பதால் இலங்கையிலிருந்து தப்பித்து இரண்டு இலட்ச ரூபாய் பணம் கொடுத்து படகு ஒன்றில் நேற்று (10) மாலை சுமார் 4 மணியளவில் இலங்கை மன்னார் பேசாலை கடற்கரையில் இருந்து சட்டவிரோதமாக தனுஷ்கோடி வந்துள்ளதாக விசாரணையில் ஜெயராசா தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் கடல் வழியாக இந்திய கடல் எல்லைக்குள் வந்தது தெரிய வந்ததால் அவர் மீது மண்டபம் மரைன் பொலிஸ் நிலைய பொலிஸார் கடவுச்சீட்டு இன்றி இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாக வழக்கு பதிவு செய்து ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தி பின் அவரை சென்னை புழல் சிறையில் அடைப்பதற்கு பொலிஸார் அழைத்து சென்றனர்.

கனடாவில் துப்பாக்கிச் சூடு: தந்தையும் மகனும் பலி

கனடாவில் துப்பாக்கிச் சூடு: தந்தையும் மகனும் பலி

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி இலங்கையின் குற்ற பின்னணி உள்ள நபர் ஒருவர் சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் ஊடுருவி அகதிகள் போர்வையில் தமிழக அகதிகள் முகாமில் பதுங்கி இருப்பதறகாக தனுஷ்கோடி வந்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு (Photos)

முல்லைத்தீவில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு (Photos)

தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதான பணிகள் ஆரம்பம்(Photos)

தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதான பணிகள் ஆரம்பம்(Photos)

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW



மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US