கனடாவில் துப்பாக்கிச் சூடு: தந்தையும் மகனும் பலி
கனடாவின் எட்மண்டன் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இந்திய வம்சாவளி பிரஜை மற்றும் அவரது 11 வயதுடைய மகன் ஆகிய இருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.
எட்மண்டன் நகரில் விற்பனை நிலையம் ஒன்றுக்கு அருகே மர்ம நபர்கள் நடத்திய குறித்த துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் 41 வயதுடைய ஹர்பிரீத் சிங் உப்பல் என்ற சீக்கியரும், அவருடைய 11 வயது மகன் ஆகியோரே சம்பவத்தில் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் எட்மண்டன் நகர பொலிஸார் தகவல் வெளியிடுகையில்,
ஆரம்பகட்ட விசாரணை
“இந்த தாக்குதலின்போது, உயிரிழந்த சிறுவனின் நண்பன் ஒருவர் காரில் இருந்துள்ளார். அவர், எந்தவித காயமுமின்றி தப்பிவிட்டார்.
இந்த தாக்குதலில் ஹர்பிரீத் சிங் உப்பலை பின்தொடர்ந்தவர்கள், காரில் அவருடைய மகன் இருக்கிறார் என தெரிந்ததும் உள்நோக்கத்துடன் துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளனர் என்பதை ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் அறிய முடிகிறது.

உப்பலுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் உள்ளன. அது தொடர்பான விசாரணைகளை அடுத்த ஆண்டு ஏப்ரலில் ஆரம்பிக்க அரசு திட்டமிட்டிருந்தது.
எனினும் இரு குழுக்களுக்கு இடையேயான மோதலில் உப்பல் கொல்லப்பட்டு இருக்க கூடும் என பொலிஸார் தரப்பில் நம்பப்படுகிறது.
மேலும், இதுபற்றிய உண்மைகள் அனைத்தும் விசாரணைகளின் பின்னரே தெரியவரும்.” என தெரிவித்துள்ளார்.
சிங்கள மக்களையும் சிங்கள ஊடகங்களையும் திரும்பி பார்க்கவைத்த றீ(ச்)ஷா: இயக்கச்சியில் வியக்கவைக்கும் முயற்சி (Video)
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri