டுபாய் பொலிசாரின் காவலில் இருந்து தப்பிச் சென்ற இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்
டுபாய் பொலிசாரால் கைது செய்யப்பட்ட இலங்கையில் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராகக் கூறப்படும் தர்மசிறி பெரேரா என்ற 'ரத்மலானே தர்மே' இரகசியமாக தப்பி சென்றுவிட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தர்மசிறி பெரேரா கைது செய்யப்பட்ட பின்னர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் பின்னர் அவர் இரகசியமாக தப்பிச் சென்றுள்ளதாக தகவல் கிடைத்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர். கோனகோவிலவைச் சேர்ந்த பாதாள உலகத் தலைவர் அஞ்சுவின் பிரதான உதவியாளர் என்று கூறப்படும் ரத்மலானே தர்மே, நாட்டில் இடம்பெற்ற பல குற்றங்கள் மற்றும் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபர் என்று பொலிசார் தெரிவித்தனர்.
சட்டவிரோத நடவடிக்கை தொடர்பாக தர்மசிறி பெரேராவை கடந்த ஆண்டு டுபாய் பொலிசார் கைது செய்தனர்.
சந்தேக நபர் இலங்கைக்கு அழைத்து வர இலங்கை பொலிசார் முயன்ற போதிலும் இரகசியமாக தப்பி ஓடிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 18 மணி நேரம் முன்

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam
