கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலம்வாய்ந்த அரசியல்வாதி கைது
வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் இலங்கை வந்த அரசியல்வாதி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பலம்வாய்ந்த அரசியல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொலிஸார் விசாரணை
இதன்போது சந்தேகநபரை கைது செய்யும் போது, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் அவரிடம் இருந்து கிட்டத்தட்ட 6000 சிகரெட்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதன் பெறுமதி சுமார் 5 இலட்சம் ரூபா எனவும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |