தீர்க்கமான அரசியல் முடிவை எடுக்க தயாராகிறது டலஸ் அணி: செய்திகளின் தொகுப்பு
நாட்டின் நலன் கருதி தீர்க்கமான சில முடிவுகள் எடுக்கப்படவுள்ளது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
டலஸ் ஆதரவு அணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்று அநுராதபுரத்துக்கு பயணம் மேற்கொண்டனர்.
ருவன்வெலிசாய உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு சென்று வழிபட்டதுடன், மகாசங்கத்தினரையும் சந்தித்து ஆசி பெற்றனர்.
அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே பீரிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் என்பது வரலாற்று சிறப்புமிக்க இடமாகும். அந்த ரஜரட்ட மண்ணில் இருந்து எமது செயற்பாடு ஆரம்பமாகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவாக தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளி்ன தொகுப்பு,