இலங்கையில் புதையல் தோண்டும் பொலிஸார்
கம்பஹா - வெயாங்கொட, வந்துரம்ப பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் புதைந்துள்ளதாக கூறப்படும் புதையலை தேடும் பணி இடம்பெற்று வருகிறது.
அத்தனகல்லை நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை நேற்று (22.11.2024) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த இடம் பல வருடங்களாக புதையல் தேடுபவர்களால் தோண்டப்பட்டு வருவதாக வெயங்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நீதவான் உத்தரவு
இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட பலர் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலிலும் வைக்கப்பட்டனர்.
இவ்வாறு தொடர்ந்தும் பலர் கைது செய்யப்படும் நிலையில், அந்த இடத்தில் உண்மையில் ஏதாவது புதைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறியுமாறு பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு அத்தனகல்லை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட சோதனையின் போது, அந்த இடத்தில் புதையல் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.
மழையினால் தடை
எவ்வாறாயினும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசாரணைகளில் நிலத்தில் ஏதோ ஒன்று புதையுண்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அகழ்வுப் பணிகள், தற்போது தொல்பொருள் திணைக்களம், புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம், வெயாங்கொட பொலிஸ், வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மீரிகம பிரதேச செயலக அதிகாரிகளின் மேற்பார்வையில் இடம்பெற்று வருகின்றன.
இருப்பினும், இன்று மதிய உணவிற்குப் பின்னரான அகழ்வுப் பணிகள் கடும் மழையினால் தடைப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam
