சர்வதேச நாணய நிதிய கடன் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கவுள்ள விளக்கம்
சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்பு தொடர்பில் வர்த்தக கடன் கொடுனர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 30 ஆம் திகதியன்று இந்த விளக்கத்தை இலங்கை அரசாங்க தரப்பு வழங்கும் என்று நிதியமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்த்தன தெரிவித்துள்ளார்.
அனைத்து தரப்பினரின் ஈடுபாட்டுடன் பெற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச நாணய
நிதியத்தின் பிணையெடுப்புக்கு பின்னர் அதன் உறுதிப்பாடு, நிலைத்தன்மை மற்றும்
வெளிப்படைத்தன்மையை காட்டும் வகையில் இந்த விளக்கமளிப்பு இடம்பெறும் என்றும்
அவர் குறிப்பிட்டுள்ளார்.