உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம்

Tamils SJB Anura Kumara Dissanayaka National People's Power - NPP Local government election Sri Lanka 2025
By H. A. Roshan May 13, 2025 11:29 AM GMT
Report

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் மூலமாக ஒரு செய்தியை ஏதோ ஒரு வகையில் தற்போதைய ஆளும் தேசிய மக்கள் அரசாங்கத்துக்கு வடகிழக்கினை சேர்ந்த மக்கள் சொல்லியிருக்கின்றனர். கடந்த காலங்களில் எதிர்க் கட்சியில் இருந்த போது அநுர தரப்பு பல விடயங்களை முன்வைத்து தேசிய அரசியலில் இடம் பிடித்தனர்.

தற்போது ஆட்சிக்கு வந்து ஏழு மாதங்கள் கடந்து போன நிலையில் பல வாக்குறுதிகளை வழங்கிய போதும் அது நிறைவேற்றப்படவில்லை.இதனை நன்கு உணர்ந்த மக்கள் அதற்கான பதிலடிகளை கொடுத்துள்ளனர்.

கிழக்கில் முஸ்லிம்கள் பரவலாக வாழும் எந்தவொரு வட்டாரங்களிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறவில்லை.அது போன்று வடக்கிலும் தமிழ் தேசியம் நிலை நிறுத்தப்பட்டுள்ளதை உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் தெளிவூட்டியுள்ளது.

தேர்தல் முடிவுகள் தோல்வியிலும் வெற்றியை தந்துள்ளது: டக்ளஸ்

தேர்தல் முடிவுகள் தோல்வியிலும் வெற்றியை தந்துள்ளது: டக்ளஸ்

உள்ளூராட்சி சபை தேர்தல்

இவ்வாறான நிலை குறித்து திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவிக்கையில் " நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் இந்த நாட்டினுடைய சிறுபான்மை சமூகம் அல்லது பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சிறுபான்மை தலைவர்கள் இந்த நாட்டினுடைய சகல மக்களினதும் அங்கீகாரம் பெற்ற தேசிய மக்கள் சக்தி முதலான கட்சிகளின் தலைவர்களுக்கும் பல உண்மைகளை மக்கள் வழங்கியிருக்கிறார்கள்.

தேசிய மக்கள் சக்தியின் , ஜே.வி.பி உடைய செயலாளர் ரில்வின் சில்வாவும் நாட்டினுடைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் அவர்களுடைய அமைச்சர்களும் இந்த தேர்தலை மாபெரும் வெற்றியாக வெளிக்கொணர்கின்ற போதும் கூட நடந்து முடிந்த பொதுத் தேர்தலை விட 20 இலட்சத்துக்கும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளார்கள்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் | Minority Community Awakens To Local Elections

தங்களுடைய நிலைப்பாட்டில் இருந்து மாற வேண்டும் என்பதை முஸ்லிம் சமூகம் சொல்லுகின்ற உரிமைகளை கதைக்கின்ற போது இனவாதம், மதவாதம் என்று கூறுவதை விட்டு விட்டு , அதே போன்று வடபுலம் தமிழ் மக்கள் கைகளிலே இல்லை அது தேசிய மக்கள் சக்தியிடமிருந்து அதிகாரத்தை பெற்றுக் கொள்வோம் என்று சொல்வதை விட அந்த பிரதேசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தமிழரசு கட்சிக்கும் விக்னேஸ்வரன் தலைமையில் இருந்த ஜனநாய முண்ணனிக்கும் கஜேந்திர குமாருடைய இலங்கை தமிழ் காங்கிரசுக்கும் அங்கு மாபெரும் அங்கீகாரத்தை வழங்கியிருப்பது மட்டுமன்றி, கிழக்கு மாகாணத்தின் சிவநேச துறை சந்திரகாந்தன் அவர்களுக்கும் 37 க்கு மேற்பட்ட உறுப்பினர்களையும் ஒரு சபையை வழங்கியிருப்பதில் இருந்து ஈபிடிபி கூட அங்கு தீவுப் பகுதியில் அவர்களுக்கான அங்கீகாரம் கிடைத்திருக்கின்ற நேரத்தில் தமிழ் தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தனித்து மாபெரும் சக்தியாக ஒன்றினைவதன் மூலம் தமது பலத்தை நிரூபித்து காட்டலாம். வடக்கு கிழக்கு மலையகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் ஒன்றினைவதன் மூலம் இதனை செய்யலாம்.

முஸ்லிம் கட்சி தலைவர்களான அகில மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தேசிய காங்கிரசின் தலைவர் அதாவுல்லா ஒன்றினைந்து மாபெரும் சக்தியை வெளிக்காட்டுவதன் மூலம் சரியான பலத்தை காட்டிக் கொள்ள முடியும்.

தலைவர்கள் மாற வேண்டும் அதே போல ஒன்றுபட வேண்டும் என்ற செய்தியை தங்கள் கருத்திற் கொண்டு வருகின்ற இரண்டாம் திகதிக்கு முன்னர் இவர்கள் யார் என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்பதே எனது கருத்தாகும்" என்றார்.இவ்வாறான நிலையில் ஆளும் அரசாங்கம் கடந்த தேர்தலை விட மக்கள் மத்தியில் செல்வாக்குகளை குறிப்பாக வடகிழக்கு மலையகம் போன்ற பகுதிகளில் சிறுபான்மை மக்களின் ஆதரவை இழந்துள்ளது.

தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு எதிராக போட்டியிட மாட்டோம்! கஜேந்திரகுமார் பகிரங்கக் கருத்து

தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு எதிராக போட்டியிட மாட்டோம்! கஜேந்திரகுமார் பகிரங்கக் கருத்து

ஆட்சியமைக்க முடியாத நிலை

நடைபெற்று முடிந்த உள்ளூர் அதிகார சபை தேர்தல் முடிவுகளின் பிரகாரம் பல பகுதிகளில் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலை கூட தோன்றியுள்ளது ஏனைய கட்சிகளின் கூட்டுச் சேர்வு மூலமே சபைகளை ஆட்சி செய்ய முடியும்.

இதனடிப்படையில் தேசிய மட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 4,503,930 வாக்குகளையும் 3,927 உறுப்பினர்களையும் பெற்றுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தி 2,258,480 வாக்குகளையும் 1,767 உறுப்பினர்களையும் பெற்றுள்ளனர் .இது போன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 954,517 வாக்குகளையும் 742 உறுப்பினர்களையும் , ஐக்கிய தேசிய கட்சி 488,406 வாக்குகளையும் 381 உறுப்பினர்களையும், இலங்கை தமிழரசு கட்சி 307,657 வாக்குகளையும் 377 உறுப்பினர்களையும், பொதுஜன முண்ணனி 387,098 வாக்குகளையும் 300 உறுப்பினர்களையும், சர்வஜன அதிகாரம் 294,681 வாக்குகளையும் 226 உறுப்பினர்களையும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 139,858 வாக்குகளையும் 116 உறுப்பினர்களையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 89,177 வாக்குகளையும் 106 உறுப்பினர்களையும் பெற்றுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் | Minority Community Awakens To Local Elections

குறித்த வாக்கு வங்கி வீதங்களை வைத்து நோக்கும் போது தமிழ் மக்களின் ஆதரவு ஆளுந் தரப்புக்கான ஒரு பாடமாக மாற்றியமைத்துள்ளனர். சிறுபான்மை கட்சிகளை சேர்ந்த தலைமைத்துவங்கள் ஒவ்வொரு சபைகளிலும் ஆட்சியமைக்க வேண்டிய தேவை உள்ளது இதனால் தவிசாளர்கள் தெரிவின் போது ஒற்றுமையாக செயற்பட்டால் தங்கள் பலத்தை அடைந்து கொள்ளலாம்.

குறிப்பாக வடக்கு- கிழக்கு தமிழர் தாயகத்தை பொறுத்த வரை பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெற்றுக் கொண்ட ஆசனங்களின் எண்ணிக்கை, தமிழ் தேசியத்தின் வீழ்ச்சியாக மதிப்பிடப்பட்டது.அதனை சீர்செய்வதற்கான களமாகவே உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரச்சாரம் அமைந்திருந்தது.

தமிழ்த் தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகள், தமிழ்த்தேசிய ஆர்வலர்கள் மற்றும் கருத்தியலாளர்கள் மத்தியில் பொது எதிரியாக ஜே.வி.பி பரிணாமமாகிய தேசிய மக்கள் சக்தி தோற்கடிக்கப்பட வேண்டும் எனும் பிரச்சாரமே முதன்மையாக காணப்பட்டது. தேர்தல் முடிவுகளிலும் அத்தகைய விளைவினையை அவதானிக்க கூடியதாகவும் உள்ளது. அவ்வாறே தென்னிலங்கையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கணிசமான சபைகளில் முன்னிலையை பெற்றுள்ள போதிலும், தனித்து ஆட்சியமைக்கக்கூடிய அறுதிப் பெரும்பான்மையை பெற முடியாத நிலைமைகளே காணப்படுகின்றது.

2024-நவம்பரில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் 61.56 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த தேசிய மக்கள் சக்தி, நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் 43.37 சதவீதமான வாக்குகளையே பெற்றுள்ளார்கள். அவ்வாறே பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி 17.66% மற்றும் பொதுஜன பெரமுன 3.14% வாக்குகளை பெற்றிருந்த நிலையில் உள்ளூராட்சி சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி 21.77% ஆகவும், பொதுஜன பெரமுன 9.20% ஆகவும் உயர்ச்சி அடைந்துள்ளமை கவனிக்கத்தக்க புள்ளிவிபரமாக காணப்படுகின்றது. மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறியதால் தேசிய மக்கள் சக்தி பெரும் வீழ்ச்சியை கண்டுள்ளது.தேர்தல் முடிவுகள் தொடர்பில் கிழக்கிலங்கை திருகோணமலையை சேர்ந்த இளைஞன் ஆர்.ரவி இவ்வாறு தெரிவித்திருந்தார்.

 மக்களை ஏமாற்றி இனவாத அரசியல் சாயம் பூசி மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரம் வெற்றி அளிக்கவில்லை இதனால் அரசாங்கம் தங்களது வாக்குகளை குறைந்த நிலையில் பெற்றுள்ளதுடன் சபைகளில் பெரும்பான்மையுடனான ஆட்சியை தக்க வைக்க முடியாத நிலையை எட்டியுள்ளது என்றார்.

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

தேசிய மக்கள் சக்தி

எனினும் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளில் வடக்கு-கிழக்கு தமிழர் தாயகப்பகுதிகளில் சபைகளை வெற்றி கொள்ளக்கூடிய வகையிலாக முடிவுகளை பெற முடியவில்லை. திருகோணமலை மாநகர சபை, பட்டினமும் சூழலும் பிரதேச சபை, கிண்ணியா நகர சபை, கிண்ணியா பிரதேச சபை உள்ளிட்ட சபைகளில் கூட தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியமைக்க முடியாது.

ஆனாலும் கோமரங்கடவெல பிரதேச சபை பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த சபை என்பதால் அங்கு அவர்களுக்கான சாதக நிலை உள்ளது இது தவிர கிழக்கின் மட்டக்களப்பு திருகோணமலையில் தமிழ் முஸ்லீம் உறுப்பினர்கள் அதிக வட்டாரங்களில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றி கொண்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் | Minority Community Awakens To Local Elections

எனினும் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபைகளில் பெரும்பான்மையைக் கூட பெறமுடியாத நிலையும், கொழும்பு மாநாகர சபையில் அறுதிப்பெரும்பான்மையை உறுதி செய்ய முடியாத நிலையும் தேசிய மக்கள் சக்தியின் சரிவையே அடையாளப்படுத்துகின்றது. மக்களின் நம்பிக்கையின்மை பொதுவாக, தேசிய மக்கள் சக்தி கட்சி பொருளாதார நெருக்கடி, ஊழல், வறுமை மற்றும் அரசியல் மாற்றம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதாக வாக்குறுதிகளை கூறி வந்தனர் அது மக்கள் மத்தியில் நிலைத்து நிற்கவில்லை.

ஆனால், உள்ளூராட்சி தேர்தல்களில், மக்கள் தங்களது அடுத்தடுத்த தேவைகளை தீர்க்கும் திறன் கொண்ட எதிர்பார்ப்பில் உள்ள கட்சிகளுக்கு வாக்களித்தனர். இதனால், தேசிய மக்கள் சக்தி கட்சியின் வாக்குகள் குறைந்தன. பிரதேச அடிப்படையிலான பிரச்சினைகள் உள்ளூராட்சி தேர்தல்கள் பொதுவாக பிரதேச அடிப்படையிலான பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன.

இந்த நிலையில், தேசிய மக்கள் சக்தி கட்சி பிரதேச ரீதியில் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதில் சவால்களை எதிர்கொண்டது. பிரதிநிதித்துவத்தின் குறைவு உள்ளூராட்சி அமைப்புகளில், மக்கள் தங்களது பிரச்சினைகளை நேரடியாக பிரதிநிதிகளிடம் கொண்டு செல்ல விரும்புகின்றனர்.

இந்த நிலையில், தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரதேச ரீதியான பிரதிநிதிகள் குறைவாக இருந்ததால், மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை. மற்ற கட்சிகளின் வலுவான பிரச்சாரங்கள் உள்ளூராட்சி தேர்தல்களில், பல்வேறு கட்சிகள் தங்களது பிரச்சாரங்களை வலுப்படுத்தியுள்ளன.

இவ்வாறு, பல்வேறு காரணங்களால், தேசிய மக்கள் சக்தி கட்சி உள்ளூராட்சி தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இது கட்சியின் எதிர்காலத் திட்டங்களை மீண்டும் மதிப்பாய்வு செய்யவும், மக்களின் தேவைகளுக்கு ஏற்ப செயல்படவும் அவசியம் என்பதை நடை பெற்று முடிந்த தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளது. 

ரணில் போல் அநுரவுக்கு தற்றுணிவு கிடையாது! முன்னாள் அமைச்சர் விமல் விளாசல்

ரணில் போல் அநுரவுக்கு தற்றுணிவு கிடையாது! முன்னாள் அமைச்சர் விமல் விளாசல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் H. A. Roshan அவரால் எழுதப்பட்டு, 13 May, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US