உக்ரைன் இராணுவத்தில் இணையும் இலங்கையின் முன்னாள் படையினர்! அலி சப்ரி வெளியிட்ட தகவல்
இலங்கையின் முன்னாள் இராணுவீரர்கள் உக்ரைன் இராணுவத்துடன் இணைந்து செயற்படுவதை கட்டுப்படுத்த முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் இராணுவத்தில் இணைந்து கொள்வதற்கு இலங்கை படையினர் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 70 முன்னாள் இராணுவ வீரர்கள் உக்ரைனின் வெளிநாட்டுப் படைப்பிரிவில் இணைந்து கொள்ள விண்ணப்பம் செய்துள்ளனர்.
இந்நிலையில், வெளிநாட்டில் இலங்கையின் முன்னாள் இராணுவீரர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தினால் எதுவும் செய்ய முடியாது என அவர் கூறியுள்ளார்.
இலங்கையர் சுதந்திரம்
உக்ரைனின் படையணியினரோடு இலங்கையின் முன்னாள் படைவீரர்கள் இணைந்து செயற்படுவதை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்விக்கு அவர்கள் ஓய்வுபெற்ற பின்னர் தங்கள் சொந்த விருப்பத்தில் உக்ரைன் சென்றுள்ளனர்.
இலங்கையர்கள் அனைவருக்கும் நடமாடுவதற்கான சுதந்திரம் உள்ளது மேலும் அவர்கள் அங்கு சென்றதும் இலங்கையால் அவர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் தாங்கள் தங்கியுள்ள நாட்டின் சட்டங்களை மீறினால் அல்லது இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட பின்னர் தலைமறைவானால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் எனவும் வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.
உக்ரைனிற்காக போரிட சென்ற முன்னாள் இராணுவவீரர்கள் குறித்த புள்ளிவிபரங்கள் அரசாங்கத்திடம் இல்லை என தெரிவித்துள்ளது.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 2 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
