தனுஷ்கோடி கடற்கரையில் மயங்கி கிடந்த இலங்கை வயோதிப தம்பதிகளால் பரபரப்பு (Video)
இலங்கையில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடி சென்ற வயதான தம்பதியர் கடற்கரையில் மயங்கிக் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருகோணமலை பகுதியில் இருந்து படகு மூலம் வயதான தம்பதியர் 2 பேர் இன்று (27) அதிகாலை ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடற்கரையில் இறங்கியுள்ளனர்.
வயதான தம்பதியர்
இவர்கள் இருவரும் மயக்க நிலையில் கடற்கரையில் விழுந்து கிடந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த கடலோர பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மயக்க நிலையில் இருந்த அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தற்போது இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
அகதிகள்
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இது வரையிலும் 85 க்கும்
மேற்பட்டவர்கள் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
