வெளிநாடொன்றில் பொலிஸாரினால் துரத்திப் பிடிக்கப்பட்ட இலங்கை மாணவன்
ஜப்பானின் செண்டாய் நகரில், இலங்கை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தம்வசம் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் இலங்கை தொழிற்கல்வி பாடசாலை மாணவர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 26 ஆம் திகதி அதிகாலை 1.50 மணியளவில், செண்டாயில் வாகன நிறுத்துமிடத்தில், பெயர் குறிப்பிடப்படாத மாணவர் கஞ்சாவுடன் சிக்கியுள்ளார்.
ரோந்து பிரிவு
ரோந்து பிரிவு வருவதனை அவதானித்து தப்பி செல்ல முயற்சித்த இலங்கை மாணவனை பொலிஸார் துரத்தி சென்றுள்ளனர்.

இதன்போது மாணவரிடம் மீண்டும் சீல் வைக்கக்கூடிய பிளாஸ்டிக் பைகளில் ஒரு கிராம் கஞ்சா இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
ஜப்பானில் கஞ்சா சட்டவிரோதம் என தனக்கு தெரியாது என இலங்கை மாணவன் தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணை
அத்துடன், கஞ்சாவை தனது சொந்த பயன்பாட்டிற்காக வைத்திருந்ததாக ஒப்புக்கொண்டாலும், குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

கஞ்சா எங்கிருந்து பெறப்பட்டது உள்ளிட்ட விபரங்களை உறுதிப்படுத்த, பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri