இலங்கை நிச்சயம் மீண்டெழும்! என்.பி.பி. அரசு நம்பிக்கை
"பேரிடர் பாதிப்பில் இருந்து இலங்கையானது நிச்சயம் மீண்டெழும். இருந்த நிலையைவிட நிச்சயம் நாம் சிறந்த நிலைக்கு முன்னோக்கிச் செல்வோம்.” – இவ்வாறு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,
தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சி
"இலங்கை மீண்டெழுவதற்காகச் சர்வதேச நாடுகள் தம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றன. இலங்கை மீது சர்வதேச சமூகத்துக்கு நம்பிக்கை இருப்பதால்தான் இவ்வாறு உதவிகள் கிடைக்கப் பெறுகின்றன.

இதன்மூலம் இலங்கையை இருந்த இடத்தைவிட சிறந்த நிலைக்குக் கொண்டு வருவதற்கே நாம் முயற்சிக்கின்றோம். தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டது. இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டது.
இலங்கை தொடர்பில் சர்வதேச சமூகத்தில் இருந்த கறுப்பு கரை நீக்கப்பட்டது. இந்நிலையில் டித்வா புயலால் எமது நாட்டுப் பொருளாதாரத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் இலங்கையை மீண்டெழ வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என குறிப்பிட்டார்.