டக்ளஸ் மதுஷிற்கு துப்பாக்கியை வழங்கியது ஏன்! எழுந்துள்ள சந்தேகம்..
பாதாள உலக குழுவை வழிநடத்தியவர் டக்ளஸ் தேவானந்தாவா என்ற கேள்வி எழுந்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(27) ஊடக சந்திப்பின் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் குறிப்பிட்ட அவர்,
போதைபொருள் கடத்தல்காரராக இருந்த மாகந்தற மதுஸினுடைய கைத்துப்பாக்கி டக்ளஸ் தேவானந்தாவினுடையது என் அதனடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைதானது பல்வேறுப்பட்ட கேள்விகளை எழுப்புகின்றது.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் போதைபொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டவர் என்று நாடாளுமன்றில் ஒருமுறை டக்ளஸ் தேவானந்தா கூறியிருந்தார்.
ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கு எதிராக போரிட்ட இலங்கை படையினரே போர் முடிந்த பின்னர் பல புகைப்படங்களையும், ஆவணங்களையும் பரிசீலித்து போதைபொருள் மற்றும் மது தொடர்பான எந்தவொரு ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என்று தெரிவித்தனர்.
அந்தவகையில் டக்ளஸ் தேவானந்தா தன்னுடைய தவறை மறைப்பதற்காக இவ்வாறாதொரு பழியை சுமத்தியிருந்தார் என குறிப்பிட்டார்.
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam