சர்வதேச உடன்படிக்கைக்கு ஆதரவு வழங்கவுள்ள இலங்கை
மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு நிலக்காியை பயன்படுத்துவதற்கு எதிரான சா்வதேச உடன்படிக்கைக்கு இலங்கையும், தமது ஆதரவை வெளியிட தீா்மானித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் 2021, ஒக்டோபா் 31 முதல் நவம்பா் 12வரை நடைபெறவுள்ளது.
இதன்போது காலநிலை மாற்றம், கியோட்டா நெறிமுறை மற்றும் பாாிஸ் உடன்படிக்கை தொடா்பான மாநாட்டின் அமுலாக்கம் என்பன மறுபரீசிலனை செய்யப்படவுள்ளன.
இதன்போது மாநாட்டுக்கு தலைமை தாங்கும் ஐக்கிய ராச்சியம், நிலக்காி இல்லாத சா்வதேச ஆற்றல் மாநாட்டை முன்மொழியவுள்ளது.
இந்தநிலையில் குறித்த யோசனைக்கு ஆதரவு வழங்க இலங்கையின் மின்சக்தி அமைச்சகம்
தீர்மானித்துள்ளது.
இதற்கு இலங்கையின் அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.