பயங்கரவாத தடைச் சட்டத்தின் கொடூரத்தை எமது சிங்கள தேசம் உணர வேண்டும்: சிறீதரன் கருத்து(Photos)

Sri Lankan Tamils Jaffna Sri Lanka Politician Sri Lanka Sri Lankan Peoples
By Sudaron Aug 21, 2022 08:04 AM GMT
Report

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கொடூரத்தை இப்போது தான் சிங்கள தேசம் உணரத் தொடங்கியிருக்கிறது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

உதயநகர் வட்டார மக்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் தாக்கம்

மேலும் தெரிவிக்கையில், “அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் தலைவர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கொடூரத்தை எமது சிங்கள தேசம் உணர வேண்டும்: சிறீதரன் கருத்து(Photos) | Sri Lanka Terrorism Prohibition

“கோட்டா கோ கம” போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது பயங்கரவாத தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த இருக்கிறார்கள்.

இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தின் கொடூரத்தை இப்போது தான் சிங்கள தேசம் உணரத் தொடங்கியிருக்கிறது. இந்த கொடூரமான சட்டம் மூலம் தமிழர்கள் 30 வருடங்களுக்கு மேலாக துன்புறுத்தப்படுகின்றனர்.

இலங்கை அரசாங்கத்தின் தொடர் அடக்குமுறையால் வெகுண்டெழுந்த தமிழ் இளைஞர்களை அச்சுறுத்தவும் தமிழ் மக்களை துன்புறுத்தவுமே இந்த பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டம்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கொடூரத்தை எமது சிங்கள தேசம் உணர வேண்டும்: சிறீதரன் கருத்து(Photos) | Sri Lanka Terrorism Prohibition

இந்த தடைச் சட்டத்தால் வருடக்கணக்கில் எமது சுற்றத்தார் விசாரணை இன்றி சிறையில் இருக்கிறார்கள். இப்போது இலங்கையின் அமைச்சர்கள் வடக்கை நோக்க புறப்படுகிறார்கள் காரணம் செப்டம்பர் மாதத்தில் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடர் ஆரம்பமாக இருக்கின்றது.

இந்த கூட்டத்தொடரை சமாளிப்பதற்கு தாம் வடக்கிற்கும் வந்து அபிவிருத்தி வேலைகளை செய்கிறோம் என காட்ட இலங்கை அரசு முயல்கிறது. இலங்கை அரசின் போலி முகத்தையும் இரட்டை வேடத்தையும் சர்வதேச சமூகம் நன்றாகவே புரிந்து வைத்திருக்கும் என நான் நம்புகிறேன்.

இந்த நாடு பொருளாதார ரீதியில் அதலபாதாளத்திற்கு போயிருக்கிறது எதிர்வரும் மாதங்களில் நிலை இன்னும் மோசமடையலாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுகிறார்.

சிறீதரனின் கோரிக்கைகள்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கொடூரத்தை எமது சிங்கள தேசம் உணர வேண்டும்: சிறீதரன் கருத்து(Photos) | Sri Lanka Terrorism Prohibition 

இந்த நிலையை ரணில் விக்ரமசிங்க மாற்றவேண்டும் என்றால் இந்த நாட்டில் புரையோடிப்போயிருக்கிற இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு முயலவேண்டும்.

விவசாயத்திற்கு தேவையான எரிபொருளையும் வழங்கினாலே எமது மக்கள் தமக்குத் தேவையான உணவினைப் பெற்றுக் கொள்வதோடு இந்த நாட்டிற்கே வழங்குவார்கள் எரிபொருள் இன்மை காரணமாக கடற்தொழிலாளர்கள் கடலுக்கு செல்ல முடியாமல் இருக்கிறார்கள்.

பஞ்சத்தை போக்க ரணில் விக்ரமசிங்க விரும்பினால் எரிபொருள் மற்றும் உரத்தையும் வழங்கவேண்டும். மக்களிடம் நாம் வினயமாக கேட்கிறோம் நீங்களும் சுயமாக வீடுகளில் வீட்டுத் தோட்டம் செய்யுங்கள் எமது சுய பொருளாதாரத்தை நாமும் கட்டியெழுப்ப வேண்டும்.

பட்டினியால் உயிர் போகாத நிலையை நாம் உருவாக்க வேண்டிய கடமை எங்கள் எல்லோருக்கும் இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராஜா, கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர், மற்றும் கிளிநொச்சி சேவைச்சந்தையின் தலைவர் மற்றும் செயலாளர் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். 

10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
நன்றி நவிலல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US