புதிய வரிக் கோப்புக்கள் : நடைமுறை சாத்தியமற்ற திட்டம்
ஒவ்வொரு தனிநபருக்கும் புதிய வரிக் கோப்புகளைத் திறப்பதை விட உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தால் அடையாளம் காணப்பட்ட கடனை செலுத்தாதவர்களிடமிருந்து செலுத்தப்படாத வரிகளை வசூலிப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
புதிய வரிக் கோப்புகள்
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையின் ஒவ்வொரு குடிமகனுக்கும் வரிக் கோப்புகளை தயாரிப்பது நடைமுறைச் சாத்தியமற்ற. தேவையான அனைத்து அளவுகோல்களையும் கருத்திற் கொண்டு, ஒரு வரிக் கோப்பினைச் செயலாக்குவதற்கு தோராயமாக அரை மணித்தியாலங்கள் தேவைப்படுகின்றது. கணிசமான நேரம் மற்றும் மனிதவளம் தேவை.

ஒன்பது அதிகாரிகள் மட்டுமே இந்தப் பொறுப்பில் பணிபுரிவதால், தினசரி செயலாக்கத் திறன் 144 கோப்புகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, இதனால் மில்லியன் கணக்கான கோப்புகளை செயலாக்குவது கடினமான மற்றும் நேரத்தைச் செலவழிக்கும் முயற்சியாகும்.
ஒவ்வொரு தனிநபருக்கும் புதிய வரிக் கோப்புகளைத் திறப்பதை விட உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தால் அடையாளம் காணப்பட்ட 1272 கடனை செலுத்தாதவர்களிடமிருந்து செலுத்தப்படாத வரிகளை வசூலிப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

எவ்வாறாயினும், இது தொடர்பாக தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்காததால், மக்கள் மீது தேவையற்ற சுமை மற்றும் நடைமுறைக்கு மாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri