வோர்ன் - முரளி கிண்ண டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
காலி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள வோர்ன் - முரளி 2025 டெஸ்ட் கிரிக்கட் தொடருக்கான இலங்கை அணி பெயரிடப்பட்டுள்ளது.
இலங்கை அணிக்கும் சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இடையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
இதில் முதல் போட்டி 2025 ஜனவரி 29ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ளது. இந்தநிலையில் டெஸ்ட் போட்டிகளுக்கான இலங்கை அணி இன்று பெயரிடப்பட்டுள்ளது.

இலங்கை அணி அறிவிப்பு
இதன்படி, தனஞ்செய டி சில்வாவின் தலைமையில், பத்தும் நிசங்க, திமுத் கருணாரட்ன, தினேஸ் சந்திமல், அஞ்சலோ மெத்தியூஸ், கமிந்து மெண்டிஸ், குசல் மெண்டிஸ், ஓசாட பெர்ணான்டோ, லஹிரு உதார, சதீர சமரவிக்ரம, சோனால் தினுச, பிரபாத் ஜயசூரிய, ஜெப்ரி வெண்டசே, நிசான் பீரிஸ், மிலான் ரத்நாயக்க, அசித்த பெர்ணான்டோ, விஸ்வ பெர்ணான்டோ மற்றும் லஹிரு குமார ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
3 மற்றும் 5 வயது குழந்தையை காட்டில் கைவிட்ட பிரான்ஸ் பெற்றோர்: போர்ச்சுகல் பொலிஸார் அதிரடி News Lankasri
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam