இலங்கை பிரிக்ஸில் இணைய வேண்டும் : ரணிலின் விருப்பம்
ரஷ்யா தலைமையிலான பிரிக்ஸ் அமைப்பு, ஒரு முக்கியமான குழுவாக மாறியுள்ளது எனவே அதில் இலங்கை அதில் இணைய வேண்டும் என்று, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ரஷ்யாவில் வைத்து தெரிவித்துள்ளார்.
ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டதாக தாம் நினைக்கவில்லை. அது, உலகின் பல நாடுகளுடன் தொடர்பு கொள்கிறது.
ரஷ்யாவின் தொடர்புகள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன என்றும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.
அணிசேரா இயக்கம்
பிரிக்ஸ் என்பது, வேறு எந்த பொருளாதார குழுவையும் விட பெரிய குழுவாக மாறியுள்ளது பிரிக்ஸில் ஈரான் மற்றும் இந்தோனேசியா போன்ற புதிய உறுப்பு நாடுகளும் இணைந்துள்ளன.
அந்த வகையில், அது, அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஒரு முக்கியமான குழுவாக மாறியுள்ளது.
எனவே, அபிவிருத்தியடைந்த மேற்கத்திய நாடுகளின் குழுவில் அங்கம் வகிக்காத இலங்கை போன்ற நாடுகளை பிரிக்ஸ் அமைப்பு பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்று ரணில் தெரிவித்துள்ளார்.
அணிசேரா இயக்கம் சரிந்துவிட்ட நிலையில், பிரிக்ஸ் அந்த இடைவெளியைக் குறைக்கும் என்று தாம் நம்புவதாகவும்,செய்ன்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது 11 உறுப்பு நாடுகள்
பிரிக்ஸ் குழுவில் தற்போது 11 உறுப்பு நாடுகள் உள்ளன: பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, சவுதி அரேபியா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் என்பன இதில் உள்ளடங்குகின்றன.
முதலில் பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனாவால் உருவாக்கப்பட்ட இந்தக் குழு, 2010 இல் தென்னாப்பிரிக்காவை உள்ளடக்கியதாக விரிவடைந்தது.
அண்மையில், பிரிக்ஸ் சவுதி அரேபியா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக மேலும் விரிவடைந்துள்ளது.
அத்துடன் ஆர்ஜென்டினா மற்றும் இந்தோனேசியா போன்ற சில நாடுகளும் அந்த அமைப்பில் சேர்ந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
