இலங்கைக்கு வரவுள்ள நான்கு கப்பல்! அரசாங்கம் வழங்கியுள்ள அனுமதி
இலங்கைக்கான டீசல் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை, சிங்கப்பூரின் பிபி எனர்ஜி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி முதல் அடுத்த வருடம் ஜூன் மாதம் 14ஆம் திகதி வரையிலான, 6 மாத காலத்திற்கு, இலங்கைக்கான டீசலை வழங்க அந்த நிறுவனத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.
4 கப்பல் டீசல்
இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்களிடமிருந்து பெறப்பட்ட விலை மனுக்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை 6 மாத காலத்திற்கு 4 கப்பல் டீசல் தொகையை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்திற்காகச் சிங்கப்பூரின் பிபி எனர்ஜி நிறுவனம் விலை மனுவைச் சமர்ப்பித்துள்ளது.
அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட கொள்முதல் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் குறித்த ஒப்பந்தத்தை அந்த நிறுவனத்துக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri