எரிபொருள் இறக்குமதிக்காக ஓமானிடமிருந்து கடன் தொகையை பெறும் இலங்கை
எரிபொருளை இறக்குமதி செய்ய ஓமான் நாட்டிடம் இருந்து 3 ஆயிரத்து 600 மில்லியன் டொலர் கடனை பெற அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Utaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
இந்த கடன் தொகைக்கு மேலதிகமாக எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் டொலர்களை கடனாக பெற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் திறைசேரியின் அனுமதியை பெற அந்த யோசனை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை , இந்த மாதத்திற்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய தேவையான டொலர்களை வழங்குவதாக மத்திய வங்கியின் ஆளுநர் உறுதியளித்துள்ளார்.
இந்த நிலைமையில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் உருவாக்கிய கனவு எந்த வகையிலும் நனவாகாது எனவும் எரிசக்தி அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 23 மணி நேரம் முன்
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri