ரணிலின் அடுத்த ஆட்டம் ஆரம்பம் - கதிகலங்கும் மகிந்த கட்சியினர்
தனக்கு எதிராக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை ஓரங்கட்டும் நடவடிக்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி தெரிவுக்கான வாக்குபதிவின் போது தனக்கு எதிராக வாக்களித்தவர்களை பதவிகளிலிருந்து அகற்ற ரணில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் தனக்கு எதிரானவர்களை ரணில் இனங்கண்டுள்ளார். அவர்களை கட்சியில் இருந்து பின்னடைவு அடைய செய்யும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ரணிலின் நடவடிக்கை

நாடாளுமன்றத்தில் நேற்று பொதுஜன பெரமுன கட்சி குழுவினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
மாவட்ட மட்டத்திலான ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஊடாக முன்னெடுக்கப்படும் ஆட்சித் திட்டத்திற்கு உடன்படாத அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் குழுத் தலைவர் பதவிகளில் இருந்து நீக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
பறிக்கப்படவுள்ள பதவிகள்

இதன் முதற்கட்டமாக கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக இருக்கும் வசந்த யாப்பா பண்டாரவை நீக்கி கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ஷவுக்கு அப்பதவி வழங்க தீர்மானிக்கப்பட்டள்ளது.
பொதுத் தேர்தலில் படுதோல்வி அடைந்த ரணில் விக்ரமசிங்க அதிஷ்டவசமாக ஜனாதிபதியாக தெரிவாகி உள்ளார். அந்தப் பதவியை தக்க வைத்துக் கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மறைமுகமாக ரணில் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
பாரிஸ் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ட்ரம்ப் - கிரீன்லாந்து விவகாரம் மீதான சர்ச்சை தீவிரம் News Lankasri