ஆட்சியை தன்வசம் வைத்துள்ள மகிந்த - கடும் அழுத்தத்தில் ரணில்
இலங்கையில் சமகால ஆட்சியில் பல்வேறு நெருக்கடிகள் காணப்பட்டாலும் மகிந்த ராஜபக்சவே ஆட்சியை தன்வசம் வைத்து்ள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டாலும், அரச நிறுவனங்களிலும் அரச கூட்டுத்தாபனங்களிலும் அந்த கட்சியுடன் தொடர்புடைய எவரையும் நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மகிந்தவிடம் ஆட்சி

அவ்வாறு பதவிகளுக்கு தேவையானவர்களை நியமிக்கும் அதிகாரத்தை மகிந்த தன்வசம் வைத்துள்ளமையினால் அரசாங்கத்தில் உள்ளக நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு அவர் விரும்பிய வகையில் ஒரு கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியை நீக்கவோ அல்லது நியமிக்கவோ முடியாத அளவுக்கு அழுத்தங்கள் பொதுஜன பெரமுன கட்சியினால் பிரயோகிக்கப்படுவதாக உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுத் தேர்தல்

இந்த நிலையில் ஜனாதிபதியின் நிர்வாக திட்டமும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக ஜனாதிபதிக்கு நெருக்கமான தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் விரைவில் பொதுத் தேர்தல் ஒன்றுக்கு அழைப்பு விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளையர்கள்தான் பிரித்தானிய குடிமக்கள்... பிரித்தானியாவில் அதிகரித்துவரும் வலதுசாரிக் கொள்கைகள் News Lankasri
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam
கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam