விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை விரும்பாத முன்னாள் ஜனாதிபதி:வெளிவரும் தகவல்-செய்திகளின் தொகுப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை விரும்பவில்லை, வன்னிக்கு சென்று விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவே விரும்பினார் என புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், "2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியாத நிலையிலே மகிந்த இருந்தார். அப்போது ஜாதிக ஹெல உறுமயவில் இருந்த நாங்கள் கடுமையாக பாடுபட்டு வெற்றிபெற செய்தோம்.
வெற்றி பெற முடியாத நிலையில் இருந்த மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற வைத்ததுடன், தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை தவிர்த்து பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்பியவரை யுத்தத்தில் தள்ளி வெற்றிபெற செய்ததும் நாங்களே.
யுத்தத்தின் பின்னர் மக்கள் மத்தியில் ஆதரவை பெற்று மீண்டும் அவர் ஜனாதிபதியாக வருவதற்கு காரணமாக இருந்தது நாமே.
மகிந்தவின் பின்னால் இருந்த நாங்கள் வெற்றி பெறவில்லை எங்களால் தான் மகிந்த வெற்றி பெற்றார்.” என கூறியுள்ளார்.
இது தொடர்பான பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

நடுக்காட்டில் குழந்தையின் அழுகுரல்., பின்தொடர்ந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான திக் திக் காணொளி News Lankasri

ராதிகாவிற்கு சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? குழப்பத்தில் நிற்கும் கோபி.. இனி என்ன செய்ய போகிறார் தெரியுமா? Manithan

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை News Lankasri

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா, CWC புகழ் மணிமேகலையிடம் கேட்ட ரசிகர்- அவர் கொடுத்த உண்மை பதில் Cineulagam

2023ல் முதல் இடத்தை பிடித்த அஜித்தின் துணிவு- என்ன விவரம் தெரியுமா, கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam
