தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள திருப்பம்! சந்திரிக்காவின் வழிகாட்டலில் உதயமாகும் புதிய கட்சி
உலக நாடுகளின் கவனம் சமீப காலங்களில் இலங்கையின் பக்கம் திரும்பியுள்ளது. காரணம் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலையும் அதனால் நிகழ்ந்த பலவேறு அரசியல் மாற்றங்களுமே ஆகும்.
இந்த நிலையில் இன்று எமது தளத்தில் இலங்கை தொடர்பிலான அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம்.
அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரியான துலஞ்சலி பிரேமதாச தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

| சஜித்தின் சகோதரியின் திடீர் முடிவு - குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேற்றம்>>> மேலும் படிக்க |
2. ஜனாதிபதி மாளிகை தனியார் சொத்தல்ல. இலங்கை மக்களின் அடையாளம். வீடியோ காட்சிகளை காண்பித்து இரகசிய இடங்களையும் உலகிற்கு பகிரங்கப்படுத்தப்பட்டது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

| வெளி உலகத்திற்கு பகிரங்கப்படுத்தப்பட்ட இலங்கையின் இரகசியங்கள்! >>> மேலும் படிக்க |
3. 'ஆசியாவின் ராணி' என்று பெயரிடப்பட்ட உலகின் மிகப்பெரிய இயற்கை மாணிக்கக் கல் இலங்கையின் ஹொரணை, தல்கஹவில பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த மாணிக்கக்கல் 6 மாதங்களுக்கு முன் சுவிட்சர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் இதுவரை விற்பனை செய்யப்படவில்லை என இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

| ஆசியாவின் மிகப் பெரிய மாணிக்கக் கல்லுக்கு நடந்தது என்ன...! வெளியாகியுள்ள தகவல் >>> மேலும் படிக்க |
4. இலங்கையில் ஏற்பட்டுள்ள டீசல் பிரச்சினையை தீர்ப்பதற்கு கட்டாருடன் சாதகமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்க தரப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் தற்போது டீசல் தட்டுப்பாடு நிலவி வருவதால், பெட்ரோல் நிரப்பு நிலையங்களுக்கு அருகே மீண்டும் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.
இந்நிலையில் நேற்று 50 சதவீத பேருந்துகளே சேவையில் ஈடுபட்டதாக தனியார் பேருந்து சங்கங்கள் தெரிவித்தன. மூன்று நாட்களாக இலங்கை டிப்போ முன் தனியார் பேருந்துகள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

| இலங்கையில் டீசல் பிரச்சினையை தீர்க்க தயாராகும் மத்திய கிழக்கு நாடு >>> மேலும் படிக்க |
5. போராட்டக்காரர்கள் எதிர்வரும் 30 ஆம் திகதி மீண்டும் கொழும்புக்கு வந்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 30 ஆம் திகதியே இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.
அன்றைய தினம் கொழும்புக்கு வந்து ஆர்ப்பாட்டங்களை நடத்த போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட அமைப்புகள் ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக புலனாய்வு பிரிவினர் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

| மீண்டும் கொழும்புக்கு வரும் போராட்டக்கார்கள்: புலனாய்வுப் பிரிவினர் அரசுக்கு வழங்கிய தகவல் >>> மேலும் படிக்க |
6. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை வரை ரயில் மூலம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை தயார் செய்யுமாறு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.

| வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோருக்கு புதிய சேவை >>> மேலும் படிக்க |
7. இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பந்து இலங்கையிடமே உள்ளது என்று சீனா கூறியுள்ளது. சீன வங்கிகளுடனான கடன் பிரச்சினையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து மூன்று மாதங்களுக்கு முன்னரே இலங்கை நிதியமைச்சகத்திடம் சீனா தொடர்பு கொண்டதாக சீன தூதரக பேச்சாளர் ஒருவர், குறிப்பிட்டுள்ளார்.

| பந்து இலங்கையின் கைகளில்! தனது முடிவை அறிவித்தது சீனா >>> மேலும் படிக்க |
8. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வசித்து வரும் கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை புனரமைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 400 மில்லியன் ரூபாவை அமைச்சரவை பத்திரம் மூலம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
கடந்த திங்கள் கிழமை நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் இந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
| கோட்டாபய செய்யாததை மகிந்தவுக்காக செய்த ரணில் >>> மேலும் படிக்க |
9. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்கவை அரசியலுக்கு அழைத்து வரும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான புதிய ஸ்ரீலங்கா கட்சியால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

| இலங்கை அரசியலில் ஏற்படவுள்ள திருப்பம்! மகனை அரசியலில் இறக்க சந்திரிக்கா வகுக்கும் வியூகம்>>> மேலும் படிக்க |
10. 300 வகையான பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கும் அரசின் நடவடிக்கை, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த இறக்குமதி தடையால் பல துறைகளில் இலட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.
| இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையால் இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் >>> மேலும் படிக்க |