எந்தத் தேர்தலையும் எதிர்கொள்ளத் தயார்! - அரசுக்கு சஜித் அணி சவால்
நாட்டில் அடுத்து எந்தத் தேர்தல் நடத்தப்பட்டாலும் அதனை எதிர்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவே இருக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
எமது நாட்டு மக்கள் ஜனாதிபதி (கோட்டா), பிரதமர் (மஹிந்த) ஆகியோரை விரட்டினர். காகத்தைக்கூட (பஸில்) விரட்டியடித்தனர்.

எனவே, தற்போது அமைந்துள்ள அரசானது, மக்கள் ஆணைக்கு முரணானது. மக்களுக்கு அஞ்சுவதால்தான், தேர்தல்களை நடத்துவதற்கு அரசு நடுங்குகின்றது.
பயங்கரவாதத் தடைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களைப் பயன்படுத்தி மக்களை ஒடுக்குவதற்கு அரசு முயற்சிக்கின்றது. அத்துடன், ‘காகம் – யானை’ கூட்டணியே தற்போது நாட்டை ஆள்கின்றது.
அதாவது,
காகத்துக்கும் (மொட்டுக் கட்சி), யானைக்கும் (ஐக்கிய தேசியக் கட்சி) அரசியல்
ரீதியில் திருமணம் முடிந்துவிட்டது என்றார்.
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam