எந்தத் தேர்தலையும் எதிர்கொள்ளத் தயார்! - அரசுக்கு சஜித் அணி சவால்
நாட்டில் அடுத்து எந்தத் தேர்தல் நடத்தப்பட்டாலும் அதனை எதிர்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவே இருக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
எமது நாட்டு மக்கள் ஜனாதிபதி (கோட்டா), பிரதமர் (மஹிந்த) ஆகியோரை விரட்டினர். காகத்தைக்கூட (பஸில்) விரட்டியடித்தனர்.

எனவே, தற்போது அமைந்துள்ள அரசானது, மக்கள் ஆணைக்கு முரணானது. மக்களுக்கு அஞ்சுவதால்தான், தேர்தல்களை நடத்துவதற்கு அரசு நடுங்குகின்றது.
பயங்கரவாதத் தடைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களைப் பயன்படுத்தி மக்களை ஒடுக்குவதற்கு அரசு முயற்சிக்கின்றது. அத்துடன், ‘காகம் – யானை’ கூட்டணியே தற்போது நாட்டை ஆள்கின்றது.
அதாவது,
காகத்துக்கும் (மொட்டுக் கட்சி), யானைக்கும் (ஐக்கிய தேசியக் கட்சி) அரசியல்
ரீதியில் திருமணம் முடிந்துவிட்டது என்றார்.
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri