இலங்கைக்கு ஏற்படப்போகும் விபரீதம்! முன்னாள் ஜனாதிபதி விடுக்கும் எச்சரிக்கை செய்தி
அரசாங்கத்தின் தற்போதைய அறிவிப்பானது மற்றுமொரு மக்கள் எழுச்சிக்கு வழிவகுக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் உள்ள பல பகுதிகளை உயர்பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்துவது நிச்சயமாக நல்லதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனெனில் மக்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பதனால் இவ்வாறான நடவடிக்கைகள் மற்றுமொரு எழுச்சிக்கு வழிவகுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசுக்கு எதிராகச் செல்லத் தூண்டும் நடவடிக்கை
இதுபோன்ற முடிவுகளை எடுப்பதும், மக்களுக்கு அழுத்தம் கொடுப்பதும் மக்களை அரசுக்கு எதிராகச் செல்லத் தூண்டும்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியுடன் இந்த நாட்களில் மக்கள் எவ்வாறு தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள் என்பதை மக்கள் மற்றும் நான் உட்பட அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சரியான திசையைக் காட்டி அவர்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மக்களுக்குத் தெரிவிக்கும் முடிவை அரசாங்கம் எடுத்திருக்க வேண்டும்.
அரச அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும் போது, பொருளாதார நெருக்கடியைத் தணிக்க அவர்கள் கடைப்பிடிக்கும் வழிமுறைகள் என்ன என்பதை அரசாங்கம் மக்களுக்கு விளக்கியிருக்க வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.
ஆனால் அவர்கள் செய்ய வேண்டியதை முற்றிலும் எதிர்மாறாக அரசாங்கம் செய்கிறது. எஸ்.டபிள்யூ.ஆர்.டி மற்றும் சிறிமாவோ பண்டாரநாயக்க இருவரும் முற்போக்கு இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து அரசாங்கங்களை அமைத்ததாகவும், அவர்கள் ஒரே மாதிரியான முன்மாதிரிகளை பின்பற்றியதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
You My Like This Video

திருமணமான 4வது நாளில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட புதுப்பெண்! மற்றொரு அதிர்ச்சி சம்பவம் News Lankasri

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri
