மக்களின் விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய வேட்பாளர் நாட்டில் இல்லை: கம்மன்பில கவலை
மக்களின் விருப்பங்களையும் தேவைகளையும் நிறைவேற்றக்கூடிய வேட்பாளர் எவரும் இங்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில(Udaya Gammanpila) கவலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“69 இலட்சம் மக்களின் வாக்குப் பெரும்பான்மையில் கோட்டாபய ராசபக்ச இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவானார்.
வாக்குப்பெரும்பான்மை
மக்களின் வாக்குப்பெரும்பான்மையில் ஆட்சிபீடமேறிய கோட்டாபய இடைநடுவில் இந்த நாட்டை விட்டுச் சென்றார்.
நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராகவே 69 இலட்சம் வாக்குகள் கிடைத்தது. இன்று இந்த நாட்டில் நல்லாட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி ரணில், சஜித், அநுர ஆகிய மூவர் களமிறங்க காத்திருக்கின்றனர்.
ஆனால் 69 இலட்சம் மக்களின் விருப்பங்களையும் தேவைகளையும் நிறைவேற்றக்கூடிய ஒரு வேட்பாளர் எவரும் இல்லை என்றே கூறவேண்டும்' என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
