ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை
ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது.
வறுமை ஒழிப்பு, பசி, சமத்துவமின்மை, காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் சீரழிவு, அமைதி, நீதி உட்பட 17 இலக்குகளை 2030ஆம் ஆண்டுக்குள் அடையும் வகையிலான இலக்குகளை முன்வைத்து இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது.
தரவரிசைப் பட்டியலில் 100 இடங்களுக்குள்
இதன்படி நேற்று வெளியி;டப்பட்ட பட்டியலில், மொத்தம் 193 நாடுகள் இடம்பெற்றுள்ளது. இதில் இந்தியா, 67 புள்ளிகளுடன் 99வது இடத்தை பிடித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் இந்த தரவரிசைப் பட்டியலில் 100 இடங்களுக்குள், முதன்முறையாக இந்தியா இடம்பிடித்துள்ளது.
கடந்த ஆண்டு இந்தியா 109ஆவது இடத்திலும், 2023ல் 112ஆவது இடத்திலும் தரப்படுத்தப்பட்டிருந்தது.
இதேவேளை இந்த வரிசையில், சீனா, 74.4 புள்ளிகளுடன் 49வது இடத்திலும், அமெரிக்கா, 75.2 புள்ளிகளுடன் 44வது இடத்திலும் உள்ளன. தரவரிசையில், ஐரோப்பிய நாடுகளான பின்லாந்து, ஸ்வீடன், டென்மார்க் ஆகியவை முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.
பூட்டான், 74வது இடத்தையும், நேபாளம், 85வது இடத்தையும், பங்களாதேஸ் 114வது இடத்தையும், பாகிஸ்தான் 140வது இடத்தையும் பிடித்துள்ளன.
இதேபோல், கடல்சார் அண்டை நாடுகளான மாலைத்தீவு, இலங்கை உள்ளிட்ட நாடுகள் முறையே 53 மற்றும் 93வது இடங்களையும் பிடித்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 12 மணி நேரம் முன்

ஏர் இந்திய விமான விபத்து எங்கள் செயல் - காதலனை பழி வாங்க போலி மிரட்டல் விடுத்த சென்னை பெண் News Lankasri

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri
