உலகக் கிண்ண தொடரிலிருந்து படுதோல்வியுடன் வெளியேறியது இலங்கை
இன்றைய உலக கிண்ண போட்டியில் படுதோல்வியடைந்த இலங்கை அணி உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (09.11.2023) இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.
நாணய சுழற்சி
குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற நியூசிலாந்து அணி களத்தடுப்பைத் தெரிவு செய்தது.
இதன்படி ,முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 46.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 171 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அணியின் அதிகபட்சமாக 51 ஓட்டங்களை குசல் பெரேரா பெற்றுக்கொடுத்தார்.
இதன்படி, நியூசிலாந்து அணிக்கு 172 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய நியூசிலாந்து அணி 23.2 ஓவர்கள் நிறைவில் 05 விக்கட்டுக்களை இழந்து 172 ஓட்டங்களை பெற்று 5 விக்கெட்டுக்களால் அபார வெற்றியடைந்துள்ளது.
you may like this,

ஈரானை தாக்கிய இஸ்ரேல்... அமெரிக்காவை எச்சரிக்க சுவிஸ் தூதரை அழைத்த ஈரான்: காரணம் என்ன? News Lankasri

27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri

பாகிஸ்தான், வங்கதேசம், சீனாவிற்கு கவலையளிக்கும் செய்தி - இந்தியாவின் ருத்ராஸ்திரா சோதனை வெற்றி News Lankasri
