இலங்கையில் முட்டை ரோல் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
அஹுங்கல்ல - வட்டுகெதர பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் முட்டை ரோல்ஸிற்குள் பிளாஸ்டிக் முட்டை இருந்ததென முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய, அஹுங்கல்ல பிராந்திய வைத்திய அதிகாரி அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இன்று காலை வட்டுகெதர பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் தான் சாப்பிட்ட முட்டை ரோல்ஸில் ஒன்றில் பிளாஸ்டிக் முட்டை இருந்ததாக மீன் வியாபாரி ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முட்டை ரோல்ஸ்
முட்டை ரோல்ஸ் சாப்பிடும் போது, முட்டையை எவ்வளவு கடித்தாலும் உடைத்தாலும், முட்டை உடையவில்லை என்பதனால் அதனை கையில் எடுத்து பார்க்கும் போது அது பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட முட்டை என தெரியவந்ததென மீன் வியாபாரி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் முட்டை பகுதியை எரித்ததாகவும் ஆனால் அது எரியவில்லை எனவும் கூறியுள்ளார்.
சுகாதார பரிசோதகர்கள்
முறைப்பாட்டிற்கமைய, அஹுங்கல்ல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
முட்டையின் பாகத்தின் முடிவைப் பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.





கிளைமேக்ஸ் மற்றும் அந்த 20 நிமிடம், ரஜினியின் கூலி படம் பற்றி வந்த முதல் விமர்சனம்... மாஸ் போங்க Cineulagam

சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam

நாங்கள் அழிந்தால்…பாதி உலகை சேர்த்து அழித்து விடுவோம்! உலக நாடுகளுக்கு பாகிஸ்தான் அச்சுறுத்தல் News Lankasri

சுவிட்சர்லாந்தில் 2 இந்தியர்களின் எதிர்பாராத சந்திப்பு: இணையத்தில் வைரலாகும் அழகிய தருணம்! News Lankasri
