சரணடைந்த தமிழர்களை ஊதியமின்றி வேலைவாங்கும் ராஜபக்சர்கள்-செய்திகளின் தொகுப்பு
இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர் ராஜபக்ச சகோதரர்களால் கைது செய்யப்பட்ட தங்களது உறவுகள், உகாண்டாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க தலைவி கலாரஞ்சினி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் குடும்ப ஆட்சி, இனப்படுகொலை ஆட்சி ஒழிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நாட்டை விட்டு தப்பி ஓடுகின்றனர்.
ராஜபக்ச சகோதரர்களால் கைது செய்யப்பட்ட எங்களது உறவுகள் உகாண்டாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கிறோம்.
அங்கு ராஜபக்ச குடும்பத்தினருக்கு சொந்தமான 11 தொழிற்சாலைகளில் ஊதியம் இல்லாத கூலிகளாக வேலைக்கு வைத்திருக்கிறார்களோ என சந்தேகிக்கிறோம்.
அந்த தொழிற்சாலைகளை வேலுப்பிள்ளை கனநாதன் என்பவரே நிர்வகித்து வருகிறார்.
இது தொடர்பாக உலகத் தமிழர்கள் ஆராய்ந்து அறிக்கை தர வேண்டுனெ வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க தலைவி கலாரஞ்சினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய செய்திகளின் தொகுப்பு,