சார்லி கிர்க் படுகொலையில் முக்கிய திருப்பம்! மரண தண்டனை வழங்க ட்ரம்ப் வலியுறுத்து..
அமெரிக்காவின் முக்கிய அரசியல் ஆய்வாளர் சார்லி கிர்க் கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிச்சூடு நடத்தியவரை அந்நாட்டு பொலிஸார் கண்டுப்பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் நெருக்கமானவரின் தகவலின்படி கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சார்லி ஜேம்ஸ் கிர்க் படுகொலை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மிக நம்பகமான, நெருங்கிய நண்பரான அரசியல் ஆர்வலர் சார்லி ஜேம்ஸ் கிர்க், கடந்த 10ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
தாராளவாத கொள்கை கொண்ட கல்லூரிகளில் பழமைவாத கொள்கைகளை பரப்பி வந்த இவர் இதற்காக பல கல்லூரிகளில் அவர் திறந்தவெளி விவாதம் நடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
அந்தவகையில் உட்டா மாகாண பல்கலைக்கழகத்தில் திறந்தவெளி விவாதத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் சுமார் 3 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களிடையே கலந்துரையாடிய சார்லி மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்த போது அவரது கழுத்தில் திடீரென குண்டு பாய்ந்த நிலையில், அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
முதல்கட்ட விசாரணையில், பல்கலைக்கழக வளாகத்தின் ஒரு மாடியில் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தியது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பான சந்தேகத்தின்பேரில் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்து விசாரித்தனர்.
சந்தேக நபர் கைது
ஆனால் அவர் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என தெரிந்த பிறகு விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் நெருக்கமானவரின் தகவலின்படி கைது செய்யப்பட்டுள்ளார். அவர்தான் துப்பாக்கிச்சூடு நடத்தினார் என்பதற்கான உயர்ந்த அளவிலான உறுதிப்பாடு இருப்பதாக டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
குற்றவாளிக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்க வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தியிருந்தார்.
குற்றவாளிக்கு 22 வயது இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே சார்லி கிர்க் கொலை செய்யப்பட்டதற்கு ஜனாதிபதி ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்தார்.
மேலும் அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக வெள்ளை மாளிகையில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
அதேபோல் இங்கிலாந்து, இத்தாலி, அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
