ராஜபக்சக்களுக்கு எதிரான நகர்வை ஆரம்பிக்கும் அநுர தரப்பு! சில நாட்கள் மட்டும் அவகாசம்
நாமல் உள்ளிட்ட ராஜபக்சக்கள் செய்த அனைத்து மோசடிகளும் இன்னும் சில நாட்களில் வெளியில் கொண்டு வரப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சில நாட்கள் அவகாசம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தாம் வங்கியை உடைக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுவதைப் பார்த்தேன். வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தை கொண்டு வருவீர்களா என நாமல் ராஜபக்ச கேட்கின்றார்.
இவர் போன்ற சிலருக்கு நான் கூறுகின்றேன், இன்னும் சில நாட்கள் பொறுமையாக காத்திருங்கள்.
ரணில் மாத்திரமல்ல பிணை முறி மோசடியில் பணத்தினை பகிர்ந்து கொண்டவர்கள் யார் என்பதை நாம் மக்களுக்கு நிரூபித்துக் காட்டுவோம்.
நீதிமன்றம் எடுக்க வேண்டிய தீர்மானத்தை நீதிமன்றம் எடுக்கும். அது மாத்திரம் அல்லாது நாமல் உள்ளிட்ட ராஜபக்சக்கள் நாட்டில் திருடியவை, வெளிநாட்டில் பதுக்கி வைத்திருப்பவை, காணிகளை திருடியவை, பங்குச் சந்தைகளில் இட்டவை என அனைத்தும் காண்பிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
