இராணுவம் கைது செய்த மகனைத் தேடி போராடிய மற்றுமொரு தாய் உயிரிழப்பு!
கடந்த 1996ஆம் ஆண்டு புத்தூர் கிழக்கு, ஊரணி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட மகனைத்தேடி போராட்டம் செய்த தாயார் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தூர் கிழக்கு, ஊரணி பகுதியைச் சேர்ந்த செல்வன் சோதி என்ற தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நிறைவேறா கனவு
தனது மகன் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னர், தனது மகனை மீண்டும் தன்னிடம் மீட்டுத் தருமாறு கோரி பல போராட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இருப்பினும் அவருக்கு இறுதிவரை அவரது மகனை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
தமது பிள்ளைகளை தேடி போராட்டங்களில் ஈடுபட்ட பல பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உயிரிழந்த நிலையில் அவர்களது பிள்ளைகளை காண்பது என்பது அவர்களுக்கு கடைசிவரை கனவாகவே அமைந்துள்ளமை மக்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
உறவுகளைத் தேடிய 125 உறவுகள் இதுவரை உயிரிழப்பு |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 3 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
