மக்களின் விருப்பத்திற்கு தலைவணங்கா விட்டால் நிலைமை மேலும் மோசமடையும்
மக்களின் விருப்பத்திற்கு தலைவணங்குமாறு இலங்கை மருத்துவச் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வுகாண மக்கள் விரும்பும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்காது போனால், தற்போதைய நிலைமையை விட வன்முறைகள் அதிகரிக்கலாம் என இலங்கை மருத்துச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலைமை மேலும் நீடித்தால், சுகாதார சேவைகள் தொடர்ந்தும் வீழ்ச்சிக்கு உள்ளாகும். தாக்குதலில் காயடைந்த 220க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மருத்துவச் சங்கம் மேலும் கூறியுள்ளது.
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam