மக்களின் விருப்பத்திற்கு தலைவணங்கா விட்டால் நிலைமை மேலும் மோசமடையும்
மக்களின் விருப்பத்திற்கு தலைவணங்குமாறு இலங்கை மருத்துவச் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வுகாண மக்கள் விரும்பும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்காது போனால், தற்போதைய நிலைமையை விட வன்முறைகள் அதிகரிக்கலாம் என இலங்கை மருத்துச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலைமை மேலும் நீடித்தால், சுகாதார சேவைகள் தொடர்ந்தும் வீழ்ச்சிக்கு உள்ளாகும். தாக்குதலில் காயடைந்த 220க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மருத்துவச் சங்கம் மேலும் கூறியுள்ளது.
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam