சட்டத்தரணிகளின் வேலை நிறுத்தம்! முக்கிய வழக்கிலிருந்து தப்பிய நாமல்..
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை சட்டத்தரணிகள் நேற்றையதினம்(16) முன்னெடுத்திருந்தனர்.
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மல்வாரச்சி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகுவதாக சட்டத்தரணிகள் சங்கத்தினர் நேற்றுமுன்தினம் (15) தீர்மானம் எடுத்தது.
அதனை தொடர்ந்து நேற்றையதினம்(16) சட்டத்தரணிகள் பணிப்புறக்ணிப்பு செய்ததால் பல வழக்குகள் விசாரிக்கபடாமல் அந்த நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அதில் பல அரசியல் முக்கியஸ்தர்களின் வழக்ககுகளும் அடங்குகின்றன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டாலும் ஆர்ப்பாட்டம் காரணமான இன்றையதினத்திற்கு (17) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கிரிஷ் தொடர்மாடி வழக்கு விசாரணைக்காக அவர்களின் தரப்பு நீதிமன்றத்திற்கு வருகை தந்த போதும் சட்டத்தரணிகள் இல்லாது திரும்பி சென்றுள்ளனர்.
இந்தவிடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுகின்றது லங்காசிறியின் news insight நிகழ்ச்சி...
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 16 மணி நேரம் முன்
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam